அதிகாரமிழந்ததால் ஆர்வத்தை இழந்த விராட்கோலி! இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன?
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒரு நாள் தொடரிலும், 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. இந்திய சமீபத்தில் இப்படி ஒரு மோசமான தோல்வியை கண்டதில்லை. ஆனால் இந்திய கேப்டன் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட விராட் கோலி இரண்டு போட்டிகளில் அரை சதம் கண்டாலும், அவரிடம் பழைய உத்வோகம் இல்லை என விவாதிக்கப்பட்டு வருகிறது.
விராட் கோலி ஒரு நாள் போட்டி என்றாலே சேசிங் அல்வா சாப்பிடுவது போல், எதிரணி பவுலிங் செய்ய திணறுவார்கள். ஆனால், தற்போது அனைத்து கேப்டன் போட்டியில் இருந்தும் விலகிய பின் ஆளே உடைந்து போனது போல் காணப்படுகிறார்.
விராட் கோலி இப்படி காணப்படுவது போல் இதற்கு முன்பு ரவிசாஸ்திரி, தோனி, கங்குலி, கும்பளே என அனைவரும் இதோ நிலையை தான் சந்தித்து சென்றார்கள். மேலும், நடந்து முடிந்த போட்டிகளில், என்னதான் அரைசதம் வரை சென்றாலும் அதற்கு மேல் அவரின் ஆட்டம் நிலை நிற்காமல் போகிறது. அவர் அடிக்கும் ஷாட்கள் அடித்தால் அவுட் தான் என்பது போல் நிலைக்கு அவரே தள்ளப்பட்டுக்கொள்கிறார்.
சொல்லப்போனால், அவர் இந்த மன நிலையில் இருந்து வெளியே வந்து ஆட வேண்டும் என்பது தான் ரசிகர்களின் கருத்தாகவே உள்ளது. நேற்றைய போட்டியில் கூட, ஷிகர் தவானும் அதே நிலையை தான் சந்தித்து வந்தார். இருவரும் விளையாடி ஆகவேண்டும் என்பது போல் இருந்தனர்.
இதற்கு முன்பு கோலி, ஷிகர் தவான் எல்லாம் நின்றால் எதிரணியை பந்தாடி ஆக்ரோஷத்துடன் காணப்படுவார்கள் ஆனால் அதெல்லாம் இப்பது இல்லாமல் போய்விட்டது. சொல்லப்போனால், இவர்கள் மட்டுமின்றி கேப்டன் ராகுலுமே மந்த நிலையையே கேப்டன் பதவியை தொடர்ந்தார்.
அணியில், தீபக் சாகர் ஷர்துல் தாகூரிடம் இருந்த உத்வேகம் வேறு எந்த வீரர்களிடம் காணப்படவில்லை. மேலும், இந்த நிலையில் இருந்து இந்திய அணி மீண்டும் வர வேண்டும் எனவும், விராட்கோலி தேவைப்பட்டால் இடைவெளி விட்டு, ஓய்வு எடுத்துக் கொண்டு உள்நாட்டுக் கிரிக்கெட் தொடர்களில் ஆடி பார்மையும் ஆர்வத்தையும் மீட்டெடுக்கலாம் எனவும் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
விராட் கோலிக்கு பழைய ஆட்டத்தை பார்க்க முடியாவிட்டாலும் அணிக்குப் பங்களிப்புச் செய்யவும், தன்னை ஒரு கிரேட் பிளேயராக நிலை நிறுத்தவும், அவரது அனுபவமும் இந்திய கிரிக்கெட்டுக்குத் தேவை.