ஆண் பிள்ளை தான் வேணும்! கணவர் செய்த செயல் - வெளிநாட்டில் இந்திய பெண் எடுத்த விபரீத முடிவு!
ஆண் குழந்தை இல்லை என கணவர் செய்த கொடுமையை தாங்கமுடியாமல் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
உத்திர பிரதேச மாநிலம் பிஜ்னோர் நகரில் வசிப்பவர் ஜஸ்பால் சிங். இவரின் மகள் மன்தீப் கவுர். இவருக்கும் அமெரிக்காவில் வசித்துவரும் ராஜ்னோத்பீர் சிங்குக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது.
ஆண் குழந்தை தான் வேணும்
இதன்பின் அமெரிக்காவுக்கு சென்ற மன்தீப் கவுருக்கு இரண்டு மகள் உள்ளனர். ஆனால், ஆண் குழந்தை வேண்டும் என தன்னை தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தி வந்ததாக வீடியோ ஒன்றில் கூறியுள்ளார் மன்தீப்.
அதன்படி திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் ஆண் குழந்தை பெற்று தரவில்லை என கணவர் தன்னை தாக்கியும், கொடுமை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இதனால், தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள இருப்பதாகவும் தனக்கு வேறு வழி தெரியவில்லை எனவும் கண்ணீருடன் கூறியிருந்தார்.
இனியும் முடியாது
இந்நிலையில், கடந்த 4ம் தேதி மன்தீப் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதற்கு முன் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 8 வருடங்களாக தொடர்ந்து அடி உதை என வாங்கியுள்ளேன். எப்போதாவது அவர் திருந்துவார் என எல்லாவற்றையும் பொறுத்டுக்கொண்டேன்.
ஆனால் என்னால் இப்போது இவற்றைத் தாங்க முடியவில்லை. அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். நான் உங்களை விட்டு பிரிகிறேன்" என கண்ணீருடன் பேசியிருந்தார்.
இதனால், இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தவே, மன்தீப் கவுருக்கு ஆதரவாக இந்திய மக்கள் அமெரிக்காவில் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
There are collosal problems in our family & social structure which we conveniently ignore or deny to accept. #DomesticViolence against women is one such serious problem. Suicide by Mandeep Kaur a NRI Punjabi woman is a wake up call to accept the problem and fix it accordingly. pic.twitter.com/F8WpkiLCZY
— Gurshamshir Singh (@gurshamshir) August 5, 2022