INDvsWI டி20 : இந்திய அணியில் ருதுராஜுக்கு வாய்ப்பு கிடைக்குமா? ஓப்பனிங் ஆர்டரில் நிலவும் கடும் போட்டி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் படு தோல்வியை சந்தித்து ஒயிட் வாஷ் ஆனது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டி விளையாட உள்ளது.
அதன்படி முதல் டி20 போட்டியானது கொல்கத்தா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணியளவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், போட்டியில் ஆடும் 11-னில் யாருக்கு இடம் கிடைக்கும் என்பதே பெரிய போட்டியாக உள்ளது.
அது ஒரு பக்கம் இருந்தாலும், ரோகித் சர்மாவுடன் யார் ஓப்பனிங் களமிறங்குவார் என கேள்விகள் எழுந்துள்ளன. ஏற்கனவே காயம் காரணமாக ராகுல் தொடரில் இருந்து விலகிய நிலையில், இஷான் கிஷ்ன் மற்றும் ருதுராஜ் கெய்வாட்டிற்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதுவரை இந்திய அணியில் இடம் பிடிக்கமுடியாமல் திணறி வரும் ருதுராஜிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என ரசிகர்களும் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால், ரோகித் சர்மாவோ தொடர்ச்சியாக இஷான் கிஷனுக்கே வாய்ப்பை வழங்கி வருகிறார்.

ஆனால், இன்றைய போட்டியில், ரிஷப் பண்ட் இடம்பெற்றதால், இன்னொரு விக்கெட் கீப்பர் எதற்கு என்ற அடிப்படையில், ருதுராஜுற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.
மேலும், இஷான் கிஷனை விட ருதுராஜ் பொறுமையாகவும், பின்னர் அடித்தும் ஆடக்கூடிய திறமை வாய்ந்தவர். சிஎஸ்கே அணிக்காக இதுவரை 22 போட்டிகளில் 46 சராசரியுடன் 839 ரன்களை குவித்து சாதனை படைத்தவர்.
இதற்கு முன் நடந்த உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்படி இருந்து இவருக்கு ஏன் வாய்ப்பை வழங்க யோசிக்கிறார்கள் என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இவருக்கு இப்பொழுது இருந்தே சரியான வாய்ப்பு வழங்கப்பட்டால், நிச்சயம் டி20 உலக கோப்பைக்கு ரெடியாகி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என முன்னாள் வீரர்களும் கூறி வருகின்றனர்.
இந்திய அணியை பொறுத்தவரை, தொடக்க ஆட்டக்காரர்களுக்கு அதிக டிமாண்ட் ஆகிவிட்டது. ஏனென்றால், ஷிகர் தவான், ராகுல், இஷான் கிஷன், ரோகித் சர்மா, இப்போது ருதுராஜ் என சரியான போட்டி நிலவியுள்ளது.

இவர்களையெல்லாம் ஒப்பிட்டு பார்த்தால், ராகுல் மற்றும் இஷான் கிஷன் இருவர் மட்டுமே மிடில் ஆர்டரிலும் விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்கள்.
எனவே இந்திய அணி சரியான ஓப்பனிங் ஆர்டரை இப்பொழுது இருந்தே தேர்வு செய்தாக வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.