இசைஞானி இளையராஜாவுக்கு திடீரென்று எம்.பி பதவி வழங்கிய பிரதமர் மோடி! வாழ்த்து கூறிய ரஜினி
இசைஞானி இளையராஜா நாடாளுமன்ற ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்படுள்ளார்.
நியமன எம்.பி.க்களாக இசையமைப்பாளர் இளையராஜாவுடன், முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி. உஷாவுக்கும் எம்.பி பதவியை பிரதம் மோடி வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது,
சாதாரண பின்னணியில் இருந்து வந்த இளையராஜா மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார். மனித உணர்வுகளை இசையின் வாயிலாக அழகுற பிரதிபலித்தவர் இளையராஜா. அவரை நாடாளுமன்ற எம்.பி.யாக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அண்மையில், இசைஞானி இளையராஜா பிரதமர் மோடியைப் பற்றிய ஆங்கில நூலுக்கு அளித்த முன்னுரையில், அவர் அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு பாராட்டி குறிப்பிட்டு இருந்தார்.
அதனால், பாஜக எதிர்பாளர்கள் பலரும்இளையராஜாவை கடுமையாக விமர்சித்தபோதும், அவர் தனது கருத்தில் உறுதியாக இருந்தார்.
இந்த நிலையில், இசைஞாணி இளையராஜா நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளது அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
நடிகர் ரஜினி வாழ்த்து
இசைஞானிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ரஜினியும் அவரின் சமூகவைத்தளத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் @ilaiyaraaja
— Rajinikanth (@rajinikanth) July 6, 2022