காதல் கணவனை நம்பி நடுக்காட்டிற்கு சென்ற மனைவி: காத்திருந்த நண்பர்கள்! பின்பு நடந்த துயரம்
டெல்லியில் நண்பனின் காதலியை காட்டில் வைத்து கொலை செய்தவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தெற்கு டெல்லியில் உள்ள மைந்தன் கர்ஹி பகுதியில் வசிக்கும் அனுஜ் குமார்(22) என்பவர் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.
அப்பெண் ஊரடங்கின் போது தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால், தனியாக இருந்த அனுஜ் 30 வயதான வேறொரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.
குறித்த பெண் காதலனின் நண்பர் ரம்ஜான் உதவியால் வீட்டை விட்டு வெளியேறி, அனுஜை திருமணம் செய்து கொண்டு வாழத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் காதலனின் முதல் காதலி வந்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால், இரண்டாவது காதலித்து திருமணம் செய்த பெண்ணை கொலை செய்ய அனுஜ் திட்டமிட்டுள்ளார்.
இதனால் கடந்த ஞாயிறன்று அனுஜ் தனது மனைவியை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் செல்ல, அங்கு அவரது நண்பர்களான நவுஷாத் மற்றும் ரம்ஜான் காத்திருந்தனர்.
உடனே பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு உடலை அங்கேயே போட்டதுடன், உடனே பொலிசாருக்கு போன் செய்து ஒரு பெண்ணை இரண்டு ஆண்கள் கொலை செய்ததை தாங்கள் அவதானித்ததாகவும் பொலிசாரை வரவழைத்துள்ளனர்.
இந்நிலையில் வழக்கு பதிவு செய்த பொலிசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, ரம்ஜானை விசாரித்த போது பெண்ணை கொலை செய்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்.