காதல் மனைவி மரணம்! அழுது கொண்டிருந்த கணவனின் மூச்சும் நின்றது- சோக சம்பவம்
தமிழகத்தில் மனைவி இறந்த துக்கத்தில் தொடர்ந்து அழுது கொண்டிருந்த கணவனும் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
தஞ்சாவூரின் திருவையாறு அருகே உள்ள அம்மன்பேட்டை வெள்ளாள தெருவைச் சேர்ந்தவர் திருவேங்கடம் (80). இவரது மனைவி அம்சவள்ளி (78).
இவர்களுக்கு 5 மகன்கள் இருக்கின்றனர், வயது முதிர்வின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அம்சவள்ளி நேற்று மாலை உயிரிழந்தார்.
மனைவி இறந்த துக்கத்தில், திருவேங்கடம் தொடர்ந்து அழுது கொண்டிருந்தார், சிறிது நேரத்தில் அவரது அழுகை சத்தம் கேட்காமல் இருக்கவே, மகன்கள் பதறிப்போய் பார்த்த போது, அவரும் மரணமடைந்தது தெரியவந்தது.
தாய்- தந்தை இருவரையும் இழந்த துக்கத்தில் மகன்கள் கதறி துடித்தனர், வாழ்ந்த போதும் ஒன்றாய் வாழ்ந்து சாவிலும் பிரியாத தம்பதியினர் பாசத்தை எண்ணி உறவினர்கள் நெகிழ்ந்து போயினர்.