அரிசி, பருப்பில் வண்டு தொல்லை இருக்குதா? ஒரு வருடம் ஆனாலும் வராமல் தடுக்க இதோ வழிமுறை
அரிசி, பருப்பு இவற்றில் மழைக்காலங்களில் வண்டு தொல்லை ஏற்படும் நிலையில், இதனை தடுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களான அரிசி, பருப்பு இவற்றினை எவ்வளவு கவனமாக பாதுகாத்து வைத்திருந்தாலும், சீக்கிரம் வண்டு, பூச்சிகள் வந்துவிடும்.
இதற்கு முக்கிய காரணம் மழை காலத்தில் காற்றில் இருக்கும் ஈரப்பதம் தான் அரிசி பருப்புகளில் பூச்சிகள், வண்டுகள், பாக்டீரியாக்கள் உருவாகுவதற்கு காரணமாகின்றன.
இதனை தடுப்பதற்கு நாம் என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அரிசி, பருப்பில் வண்டு
அரிசி மற்றும் பருப்பினை வெயில் அடிக்கும் போது நன்றாக காய வைத்தால், இதிலுள்ள ஈரப்பதம் நீங்கிவிடும். இதனை மழை வரும்முன்னே கடைபிடித்து சேமித்து வைக்க வேண்டும்.
வேப்பிலையில், பாக்டீரியாக்கள் வளர்ச்சி மற்றும் பூச்சி எதிர்ப்பு பண்புகள் உள்ள நிலையில், சில வேப்பிலைகளை அந்தெந்த டப்பாவில் போட்டு வைத்தால் பூச்சி தொல்லை இருக்காது. மாதத்திற்கு ஒரு முறை வேப்பிலையை கண்டிப்பாக மாற்ற வேண்டும்.
பருப்பு, அரிசி வைத்திருக்கும் டப்பாவில் சில கிராம்புகளை போட்டு வைத்தால் இந்த பிரச்சனை வராது.
இதே போன்று கல் உப்பை நேரடியாக போட்டு வைக்காமல் ஒரு துணியில் கட்டி உள்ளே போட்டு வைத்தால் பூச்சி, வண்டு வராமல் தடுக்கலாம்.
மிளகு அல்லது பிரியாணி இலையை உள்ளே போட்டு வைத்தால், சீக்கிரம் பூச்சி பிடிக்காமல் இருக்கும். ஏனெனில் இந்த வாசனை பூச்சிகளுக்கு பிடிக்காது.
பருப்பு வைக்கும் டப்பாவில் சிறிய பெருங்காய துண்டை போட்டு வைத்தால் பூச்சி தொல்லை இல்லாமல் இருக்கும்.
பருப்புகளில் பூச்சி வந்தாலும், வெயிலில் காய வைக்க முடியவில்லை எனில், வாணலியில் போட்டு வதக்க வேண்டும். பின்பு சலித்து டப்பாவில் போட்டு வைக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |