ஷப்பாத்தி மாவு குளிர்சாதன பெட்டியில் வைத்தாலும் கருப்பாகுதா? இப்படி சேமித்து வைங்க
சில நேரங்களில் குளிர்சாதன பெட்டியில் ஷப்பாத்தி மாவை சேமித்து வைத்தாலும் அது பூஞ்சணம் பிடிக்கும் இதை பார்ப்பதற்கு கருப்பாகவும் இருக்கும்.

ஷப்பாத்தி மா
கோடைக்காலத்தில் மீண்டும் மீண்டும் மாவு பிசையும் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக ஒரே தடவையில் அதிக அளவு மாவைப் பிசைந்து, அதை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்து பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் மாவு சில மணி நேரங்களிலேயே கருப்பாக மாறி, அதன் மீது ஒரு தடித்த கறுப்புப் படலம் போல பரவி இருக்கும்.

இதன் பின்னர் இந்த மாவை பயன்படுத்த முடியாது இதை ஷப்பாத்தி செய்யாமல் குப்பையில் போட்டுவிடுவார்கள். இதற்கு காரணம் பல உள்ளது.
ஆனால் பலருக்கும் ஒரு கேள்வி இருக்கும். அதாவது குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட மாவு ஏன் கருப்பாக மாறுகிறது என்பது தான்.
இதற்கான காரணத்தை பதிவில் பார்விரிவாக பார்ப்பதுடன் இதை பாதுகாப்பாக வைக்கும் முறை பற்றியும் பதிவில் பார்க்கலாம்.

பாதுகாப்பாக எப்படி சேமிப்பது?
மிஞ்சிய ஷப்பாத்தி மாவை நீண்ட நாட்களுக்கு அப்படியே வைத்திருக்க விரும்பினால் அதற்கு சிறந்த வழிகள் உள்ளது. இதை பின்பற்றிகால் ஷப்ப்பாத்தி மாவை அப்படியே வைத்திருக்கலாம்.
மாவைப் பிசைந்த பின்னர் அது புத்துணர்ச்சியுடன் இருக்க, சிறிதளவு நெய் அல்லது எண்ணெயைத் தடவவும். இது மாவு ஆக்ஸிஜனேற்றம் அடைவதைத் தடுக்கும்.

குளிர்சாதனப் பெட்டியில் மாவைச் சேமித்து வைத்தால் , காற்றுப் புகாத கொள்கலனைப் பயன்படுத்தி அதை சேமித்து வைப்பது அவசியம் . தளர்வான கொள்கலனைப் பயன்படுத்தினால், குளிர்சாதனப் பெட்டியில் உள்ள காற்றின் காரணமாக மாவு கருமையாகும்.
மாவை சேமிக்கும் போது அலுமினிய தாளை பயன்படுத்துவது மிகவும் முக்கியம். இது நீண்ட நாட்களுக்கு மாவை அப்படியே வைத்திருக்கும்.
மாவை ஈரமான பருத்தித் துணியால் மூடி வைப்பது, அது விரைவில் கெட்டுப்போவதைத் தடுக்கிறது. மேலும் குளிர்சாதன பெட்டியில் இந்த படிமுறைகளை பின்பற்றினால் அதிக நாட்களுக்கு இந்த மாவை சேமிக்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |