பழங்கள் நறுக்கிய பின் கலர் மாறிவிடாமல் அப்படியே இருக்கனுமா? ஒரு துளி சோடா போதும்!
நீங்கள் ஃப்ரஷ்ஷாக வெட்டிய பழங்கள் சிறிது நேரத்தில் நிறம் மாறி கடினமடைந்து விடும். இதனைத் தடுக்க நாமும் பல முறை முயற்சி செய்து பார்த்தாலும், பழத்தின் நிறம் மாறி பழுப்பு கலராக பழம் மாறுவதை தடுக்க முடியாது.
இதனாலே பலரும் வெட்டிய பழத்தை உடனே சாப்பிட விரும்புவர்.
இதனைத் தவிர்த்து, பழங்களை அதன் நிறத்திலேயே இருக்க வைக்க உதவும் சில முக்கிய உதவிக் குறிப்புகள் பற்றித் தெரிந்து கொள்வோம் வாங்க.
ஓடும் நீரில் கழுவுவது
நாம் பொதுவாக நம்முடைய பழங்களை கழுவி விட்டுத் தான் சாப்பிடுவோம். ஆனால், பழங்களை தண்ணீரில் இருந்து அப்படியே வெளியில் எடுத்து வெட்டத் தொடங்குகிறோம்.
இதனால் தான் பழங்கள் பழுப்பு நிறமாக மாறும். இதனைத் தடுக்க எளிதான ஒரு வழி என்னவென்றால், பழங்களின் மேல் தண்ணீரை திறந்து விட்டுக் கொண்டே வெட்டுவது தான். இது காற்றின் மூலம் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுக்க உதவும்.
உப்பு நீரைப் பயன்படுத்துதல்
நீங்கள் உங்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு ஒரு பெரிய கிண்ணத்தில் பழங்களை பரிமாற விரும்புகிறீர்கள். ஆனால், அவை பழுப்பு நிறமாக மாறி விடுமோ என்று அஞ்சுகிறீர்களா ? அப்படி என்றால் இந்த எளிய குறிப்பை பயன்படுத்திப் பாருங்கள்.
அது என்னவெனில், பிரெஷ்ஷாக வெட்டிய அனைத்து பழங்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு அதில், உப்புச் சேர்த்து நீர் ஊற்றிக் கொள்ளுங்கள. பழத் துண்டுகளையும் சுமார் 2 நிமிடங்கள் அந்த நீரிலேயே ஊற வைத்து விட்டு, பின் அந்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளுங்கள்.
பின், அந்தப் பழங்களை சாதாரண நீரில் கழுவி பரிமாறுங்கள். அதேபோல், வெட்டிய பழத் துண்டுகள் மீது சிறிது உப்பை தெளித்து மூடி வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் அவற்றை சாப்பிட விரும்பும் போது, தண்ணீரில் கழுவி விட்டு பின் சாப்பிட்டு மகிழுங்கள்.
தேன் கலந்த நீரில் கழுவுவது
பெரும்பாலான நேரங்களில் நாம் பழங்களை வெட்டி சேமித்து வைக்கும்போதோ அல்லது மதிய உணவிற்கு எடுத்துச் செல்லும்போதோ அவை பழுப்பு நிறமாக மாறி விடும். அதனைத் தவிர்க்க தண்ணீருடன் சிறிது தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
அந்தத் தண்ணீரில் வெட்டியா அனைத்துப் பழ துண்டுகளையும் போட்டு, சுமார் 30-ல் இருந்து 40 விநாடிகள் வரை ஊற வையுங்கள்.
பின் அந்த தண்ணீரை வடிகட்டி விடுங்கள். இது போன்று செய்வது பல மணிநேரங்களுக்குப் பிறகும் உங்களின் பழத் துண்டுகளை புதியதாக வைத்திருக்க உதவும்.
சோடாவை பயன்படுத்துவது
புதிதாக வெட்டிய பழங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் சோடா நீரை ஊற்றி விடுங்கள். அந்தப் பழங்களை 5 நிமிடங்கள் அதிலேயே ஊற வைத்து, பின் சோடாவை வடிகட்டிக் கொள்ளுங்கள்.
இது பழங்களை ஒரு நாள் முழுதும் புதிதாக வைத்திருக்கச் செய்யும்.