BHIM, Paytm மற்றும் PhonePe வழியாக மின் கட்டண பில்களை நொடியில் செலுத்துவது எப்படி?
ஆன்லைன் பணப்பரிவர்த்தனை பற்றி இந்த கொரோனா காலத்தில் அனைவரும் தெரிந்திருப்பது அவசியமாகும்.
தற்போது டி,டி. எச் கட்டணம் முதல் மெட்ரோ ரயில் கார்டுகள் மற்றும் சிலிண்டர்கள் வரை எளிதாக ஆன்லைனில் புக் செய்துவிடலாம் பெற்று விடலாம்.
இன்று BHIM, Paytm மற்றும் PhonePe வழியாக மின் கட்டண பில்களை செலுத்துவது எப்படி என்பதை முழுமையாக தெரிந்து கொள்வோம்.
BHIM
BHIM செயலியை முதலில் நீங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து, வங்கிக் கணக்குடன் இணைத்துக் கொள்ளுங்கள். பின்னர், அதில் இருக்கும் Pay Bills என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
அப்போது, மின் கட்டணம் முதல் ரீச்சார்ஜ் வரை என பல்வேறு ஆப்சன்கள் திரையில் தோன்றும். அதில், நீங்கள் எலக்டிரிக் பில் என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து, அதில் காட்டப்படும் தொகைக்கு ஓகே கொடுக்க வேண்டும்.
பின்னர் UPI லிங்கை உள்ளீடு செய்யும்போது, நொடிப்பொழுதில் உங்கள் பில் கட்டணம் செலுத்தப்பட்டுவிடும்.
Paytm
Paytm செயலியை பயன்படுத்துபவராக நீங்கள் இருந்தால், முதலில் செயலிக்குள் செல்லுங்கள்.
செயலியின் முகப்பு பக்கத்தில் இருக்கும் ரீச்சார்ஜ் மற்றும் பில் பேமெண்ட்ஸ் என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதில், இரண்டாவதாக மின்சாரக் கட்டணம் என்ற ஆப்சன் இருக்கும். அதனை கிளிக் செய்தால் உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து கட்டணம் செலுத்துவபவரின் விவரத்தை உள்ளீடு செய்ய வேண்டும். கடைசியாக Continue என்ற ஆப்சனை கிளிக் செய்து பில்லை செலுத்துங்கள்.
PhonePe
PhonePe செயலியிலும், BHIM மற்றும் Paytm போன்று எளிதாக மின் கட்டணத்தை செலுத்தலாம். போன்பே செயலிக்குள் சென்று ரீச்சார்ஜ் மற்றும் கட்டணங்கள் என்ற விருப்பதை தேர்ந்தெடுங்கள்.
மூன்றாவது ஆப்சனாக வரும் எலக்டிரிக் பில் என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள். அடுத்து, பில் செலுத்துபவரின் விவரத்தை உள்ளீடு செய்ய வேண்டும்.
இந்த விவரங்களை பதிவு செய்தவுடன் கட்டண விவரம் திரையில் தெரியும். கடைசியாக UPI பின்னை கொடுத்து கட்டணத்தை செலுத்தலாம்.
முக்கிய அறிவிப்பு
கூகுள் பே (Google Pay) போன்ற மற்ற UPI பயன்பாடுகள் மூலம் செயலிகளில் மின் கட்டணத்தை இதே முறையில் செலுத்திவிடலாம். ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதை விட, செயலிகள் வழியாக கட்டணம் செலுத்துவது மிக மிக எளிதான வழி. அதேநேரத்தில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.