வீட்டில் சாதம் மீந்து விட்டதா? தூக்கி வீசாதீங்க! இப்படி பக்கோடா செய்ங்க
சில சமயங்களில் உங்களிடம் மீதமுள்ள சாதம் இருக்கும், அதை என்ன செய்வதென்று உங்களுக்கு தெரியாமல் இருக்கும். இதற்கு தான் இந்த பதிவில் ஒரு வித்தியாசமான ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கப்போகிறோம்.

மீதமுள்ள சாதம்
வீட்டில் மீதமுள்ள சாதம் இருந்தால் அதை தூக்கி போடாமல் அதை வைத்து உணவு தயாரிக்கலாம்.
பொதுவாக பழைய சாதம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இதை வைத்து மிகவும் கிரிஸ்பியான பக்கோாஸ் செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா.
அதற்கான செய்முறை மற்றும் வையான பொருட்களை பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- சமைத்த சாதம் – 1 கப்
- வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
- கொத்தமல்லி இலை – 1/4 கப்
- கசூரி மேத்தி – 1 மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- கடலை மாவு – 1/2 க
- ப் தண்ணீர் – தேவையான அளவு
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை
ஒரு பாத்திரத்தில் சமைத்த சாதத்தை போட்டு அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
பின்னர் கசூரி மேத்தி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் கடலை மாவை சேர்த்து நன்றாக கலக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து பக்கோடா மாவு பதத்திற்கு பிசையவும்.

வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சூடாக பரிமாறினால் சுவையாக இருக்கும்.
இந்த பக்கோடாக்களுடன் சாப்பிட சட்னி மிகவும் அருமையான தேர்வாக இருக்கும்.