மைதா மாவு மட்டும் போதும்! வீட்டிலேயே ருசியான பட்டர் பிஸ்கட் செய்யலாம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பொருள் தான் பிஸ்கட்.
இதை மிக எளிதாக வீட்டிலேயே செய்யலாம், மைக்ரோஓவன் இல்லாமல் மைதா மாவு கொண்டு வீட்டிலேயே செய்வது எப்படி? என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 200 கிராம்
வெண்ணெய் - 100 கிராம்
பொடித்த சர்க்கரை - 75 கிராம்
உப்பு, பேக்கிங் பவுடர் - தலா கால் டீஸ்பூன்.
செய்முறை
மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்றாகக் கலந்து பலமுறை சலித்துக் கொள்ளவும்.
வெண்ணெய், சர்க்கரை இரண்டையும் கலந்து மிருதுவாகும் வரை குழைக்கவும்.
சர்க்கரை நன்றாக கரைந்தவுடன் இதனுடன் மைதா, பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்துக் கலந்து பிசையவும்.
இந்த மாவை சப்பாத்தி கல்லில் வைத்து வட்டமாக தட்டவும். இதனை பாட்டில் மூடி அல்லது பிஸ்கட் அச்சினால் கால் அங்குல பருமன் அளவுக்கு வட்டமாக வெட்டவும்.
வெட்டிய துண்டுகளை 'போர்க்’ (முள்கரண்டி) கொண்டு லேசாக குத்திவிடவும். ஒரு தட்டில் நெய் தடவி, மேலே மைதா மாவு தூவி, செய்து வைத்த துண்டுகளை இடைவெளிவிட்டு அடுக்கவும்.
அடிகனமான வாணலியில் மணலை சூடுபடுத்தி, அதன் மேல் தட்டை வைத்து, இட்லி பானை மூடியால் அழுத்தி மூடவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்).
20 நிடத்துக்குப் பிறகு, வாசனை வர ஆரம்பித்ததும் அடுப்பை அணைக்கவும்.
சிறிது நேரத்துக்குப் பிறகு பிஸ்கட்டுகளை வெளியே எடுக்கவும், ருசியான பட்டர் பிஸ்கட் தயார்.