ஆந்திரா ஸ்டைல் மட்டன் கிரேவி... வீட்டிலேயே எப்படி செய்யலாம்?
அசைவ சமையல்களில் ஆந்திரா வகை கார மசாலாக்கள் அதிகமாகவே பிரபலமானவை. ஆந்திரா ஸ்பெஷல் மட்டன் கிரேவி சுவையாகவும், சூப்பராகவும் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
மட்டன் - அரை கிலோ
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 2
மிளகாய் தூள் - ஒன்றரை ஸ்பூன்
மிளகுதூள் - ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
அரைப்பதற்கு
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
சீரகம் - ஒரு ஸ்பூன்
பட்டை - சிறிதளவு
மல்லி - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மட்டனை நன்றாக கழுவி மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் ஆறு விசில் வரும்வரை வேக வைக்க வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
இதனுடன் தக்காளி, மட்டன் சேர்த்து வதக்கிவிட்டு, அரைத்து வைத்த மசாலா கலவையை சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
நன்றாக கொதித்து வந்ததும் மிளகு தூள் தூவி, கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான ஆந்திரா மட்டன் கிரேவி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |