AC-யை முறையாக பராமரிப்பது எப்படி? இந்த தவறை இனியும் செய்யாதீர்கள்! எச்சரிக்கை
ஏ.சி வாங்குபவர்கள் அனைவரும் அதை பொறுத்தும் முறை முதல் பராமரிப்பு வரை முழுமையாக தெரிந்துவைத்திருக்க வேண்டும். இதனால் ஏ.சி நீண்ட நாள்களாக பழுதாகாமல் இருக்கும் என்பதோடு வெடிக்கும் அபாயகரமான நிலைக்கும் ஆளாகாது. முக்கியமாக ஏ.சி வெடித்து உயிரிழந்தார்கள் என்னும் செய்தி கேட்கும் போது மட்டுமே ஏசி பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
முதலில் ஒருவர் ஏ.சி வாங்கும் போது வீட்டில் நீங்கள் பொருத்தும் இடத்தின் சதுரடியை கணக்கில் கொள்ளுங்கள். உங்கள் அறை மொத்தம் 100 சதுரடி கொண்டிருந்தால் 1 டன் அளவுள்ள ஏ.சி போதுமானது. அதற்கு மேல் இருந்தால் ஒன்றரை டன். 200 சதுரடி இருந்தால் 2 டன் கொண்ட ஏ.சி பொருத்தலாம். தேவையெனில் இரண்டு ஏ.சிக்கள் வாங்கியும் பொருத்தலாம்.
இதனையடுத்து, ஏ.சி வாங்கும் போது இலவச ஸ்டெபிலைசர் கொடுப்பார்கள். தரம் குறைந்த ஸ்டெபிலைசராக இருந்தால் அதை தவிர்த்துவிடுங்கள். நல்ல தரமான ஸ்டெபிலைசரை தேர்வு செய்யுங்கள். அதே போன்று ஏ.சியில் உயர் மின்னழுத்தத்தை தாங்க கூடிய அளவுக்கு கேபிள், சுவிட்ச் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
இதனைத்தொடர்ந்து, ஏ.சி பொருத்தும் அறையில் சூரிய ஒளி நேரடியாக படக்கூடாது. அந்த மாதிரி இருந்தால் நீங்கள் அறையில் திரைச்சீலைகள் பயன்படுத்தலாம். சூரிய ஒளி அறைக்குள் இருந்தால் ஏ.சி குளிர்ச்சி அடைய சிறிது நேரம் பிடிக்கும். அதோடு கரண்ட் அதிகம் பிடிக்கும்.
குறிப்பாக. ஏ.சி இயங்கிகொண்டிருக்கும் போது அதில் நறுமணம் கமழும் வாசனை திரவியங்களை பயன்படுத்த கூடாது இவை ஏ.சியின் உள்ளிருக்கும் காயிலில் பட்டுவிட்டால் காயில் பழுதாகிவிடக்கூடும். ஏ.சி இருக்கும் அறையில் அதிக பொருள்களை வைக்க வேண்டாம். குறிப்பாக வேண்டாத பொருள்களை வைக்கும் இடமாக மாற்ற வேண்டாம்.
ஏ.சி பயன்படுத்தும் போது அதிக டிகிரியில் வைக்க கூடாது. 23-24 அளவில் பழக்கப்படுத்தி கொள்ளலாம். 22 டிகிரிக்கு கீழ் வைக்க கூடாது. அதே போன்று ஏ.சி பயன்படுத்தும் போது அறையில் ஃபேனையும் ஓடவிடக்கூடாது. இதனால் ஃபேனில் இருக்கும் தூசிகள் ஏ.சியின் உள்ளே செல்ல வாய்ப்புண்டு.
குறிப்பு
- மாதமிருமுறை ஏ.சி ஃபில்டரை கழற்றி சுத்தம் செய்ய வேண்டும். இதில் இருக்கும் தூசிகள் தான் ஏ. சி யை நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்கும் போது வெப்பம் உருவாகும் போது தீப்பற்றி வெடிக்க செய்கின்றன.
- ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஏ.சி சர்வீஸ் செய்ய வேண்டும். அனுபவமிக்க ஏ.சி மெக்கானிக்குகளை கொண்டு சர்வீஸ் செய்ய வேண்டும். புகை அதிகம் இருக்கும் இடங்களில் வசிப்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும்.
- ஏ.சி சரியான கண்டிஷனில் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.
அடுத்ததாக, ஏ.சியின் உள்ளே செயல்படும் ஃபேன் மோட்டார்கள், உள்ளிருக்கும் பெல்ட், கேஸ் அளவு அனைத்தையும் சரிபார்ப்பதும் அவசியம். கேஸ் அளவு குறைந்தாலும் குளிர்ச்சி கிடைக்காது. இதையும் சரிபார்த்து நிரப்ப வேண்டும்.