மழைக்காலத்தில் துணிகளை காயவைக்க சிரமப்படுகின்றீர்களா? இந்த கவலை இனி வேண்டாம்
பொதுவாகவே மழை காலங்களில் துணிகளை காயவைப்பது அனைவருக்கும் மிகவும் சவாலான விடயமாகவே காணப்படுகின்றது.
துணியை காய வைப்பதை விட அதில் ஈர நாற்றம் வராமல் காயவைப்பதே மிகவும் கடினமான காரியமாகும்.
சிலர் தங்கள் ஆடைகளை மின்விசிறிக்கு அடியில் வைத்து காய வைத்தாலும், அந்த ஆடைகளில் பூஞ்சை போன்ற நாற்றம் வீசுகிறது. அதனை தவிர்த்து மழை காலத்திலும் துணிகளை எவ்வாறு ஈர நாற்றம் இன்றி இலகுவாக காய வைக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மழைக்காலத்தில் துணிகளை காய வைக்க...
பொதுவாகவே கடைகளில் கிடைக்க கூடிய s வடிவிலான ஹுக்களை வாங்கி வைத்துக்கொள்ளலாம் மழை காலத்தில் மாத்திரம் இதில் கயிறு கட்டி தேவையான இடத்தில் மாட்டி துணிகளை காயவைக்கலாம். மழைக்காலத்தில் துணிகளை காய வைக்க இது சிறந்த தீர்வாக இருக்கும்.
துணிகளை காயவைக்க ஹீட்டரை பயன்படுத்தலாம். ஹீட்டர் வெப்பத்தில் துணிகளை காய வைத்தால், விரைவில் ஈரப்பதம் இல்லாமல் போகும். ஹீட்டரை பயன்படுத்துவதால் கரண்ட் பில் சிறிது அதிகம் ஆகலாம், ஆனால் அவசர தேவைக்கு இவை உடனே தீர்வை கொடுக்கின்றன. சூரிய வெளிச்சம் இல்லாத நேரத்திலும், துணிகளை துர்நாற்றம் இல்லாமல் காய வைக்க இது சிறந்த தீர்வாக இருக்கும்.
வெயிலில் துணிகளை காய வைக்க முடியவில்லை என்றால், வீட்டில் உள்ள கம்பிகளில் காயவைத்து ஜன்னல்கள் மற்றும் கதவுகளை திறந்த முறையில் வைத்திருப்பதை உறுதி செய்யுங்கள். இந்த முறையில் காலதாமதம் ஆகும் என்றாலும், துணிகள் நன்றாக காயும்.
ஹீட்டர் அல்லது பேன்களை பயன்படுத்த முடியாத போது இவ்வாறு முயற்சி செய்யலாம். துணிகளை விரைவாக உலர்த்துவதற்கு உதவியாக இருக்கும் மற்றொரு முறை, உங்கள் துணிகளை வாஷிங் மிஷினில் கூடுதல் நேரம் ட்ரையரில் போடுங்கள். இதன் மூலம் துணிகள் விரைவாக காயும்.
ட்ரையரில் லைக்ரா, நைலான், அக்ரிலிக், பாலியஸ்டர், விஸ்கோஸ் அல்லது ஸ்பான்டெக்ஸ் ஆகியவற்றால் செய்யப்பட்ட ஆடைகளை சிறிது நேரம் மட்டும் உலர வைக்கவும். உங்கள் ட்ரையர் உடனே துணிகளை உலர வைக்க, ஒவ்வொரு முறை அதனை பயன்படுத்திய பிறகும் நன்றாக சுத்தம் செய்யவும்.
அழுக்கு மற்றும் வேறு ஏதேனும் குப்பைகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். காட்டனில் செய்த துணிகளை காயவைப்பது கடினமாக இருக்கும் மற்றும் சுருக்கத்திற்கு வழிவகுக்கும். காட்டன் ஆடைகள் ஈரமாக இருக்கும்போது அவற்றை கொடிகளில் தொங்கவிட்டு உலர்த்துவது நல்லது.
கெடிகளில் உடைகளை நேரடியாக போட்டு காயவைத்தால் இலகுவில் காயவைக்க முடியாது அதே சமயம் ஆங்கர்களில் துணிகளை மாட்டி காயவைப்பதால் ஒரே சமயத்தில் ஒரு கொடியில் நிறைய துணிகளை காய வைக்க முடியும்.
இதன் போது துணிகள் ஒன்றுடன் ஒன்று உரசாமல் இருப்பதற்கு கொடிகளின் இடையில் முடிச்சிகளை போட்டுக்கொள்வது பெரிதும் உதவியாக இருக்கும். இது போன்ற உத்திகளை சரியாகவும் முறையாகவும் பயன்படுத்தினால் மழை காலத்தில் துணிகளை காண வைப்பது கடினமான விடயமாக இருக்காது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |