3 நாட்களில் Skin Tone மாறும்.. தினமும் போடுங்க- பலன் நிச்சயம்
இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் சீரற்ற சருமத்தை எப்படி அழகாக மாற்றம் என பல முயற்சிகள் செய்து வருகிறார்கள்.
இதற்கான முக்கிய காரணமாக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னர் முகத்திற்கு சரியானதொரு பராமரிப்பை வழங்காதது தான்.
முகம் வெளியில் சென்று வந்த பின்னர் பார்ப்பதற்கு ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு நிறத்தில் இருந்தால் அதனை சரிச் செய்ய வீட்டிலுள்ள சில பொருட்களை பயன்படுத்தலாம். கடைகளில் விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த கிரீம்களை விட இவை சிறந்த தீர்வை தரும்.
அந்த வகையில், முகத்தை ஒரே நிறத்தில் வைத்து கொள்ள பயன்படுத்தும் Face pack எப்படி தயாரிக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி - அரைத்த எடுத்துக்கொள்ளவும்
- தக்காளி - 1 மசித்து
- தண்ணீர் - 1 கப்
- தேன் - 1 டீஸ்பூன்
பேக் செய்வது எப்படி?
முதலில் அரிசியை நன்றாக கழுவி இரவு முழுவதும் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
மறுநாள் காலையில் அதனை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
அது ஒரு கெட்டியான பேஸ்டாக மாறியதும், தக்காளியின் தோலை நீக்கி மசித்து அதனுடன் சேர்க்கவும்.
அதே கலவையில் தேன் கொஞ்சமாக கலந்து பேக் போன்று கெட்டியாக கலந்து கொள்ளவும்.
இதனை முகம் கழுவதற்கு முன்னர் முகத்தில் தடவி, மசாஜ் செய்து விட்டு கழுவினால் வெள்ளையாகலாம்.
பயன்படுத்துவது எப்படி?
அரிசி மற்றும் தக்காளி ஃபேஸ் பேக்கை தடவுவதற்கு முன்னர் முகத்தை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
அதன் பின்னர் முகத்தில் பேக்கை போட்டு சுமாராக 15 முதல் 20 நிமிடங்கள் உலர விடவும்.
பேக் முகத்தில் நன்றாக காய்ந்தவுடன் முகத்தை ஈரமான துணி கொண்டு சுத்தம் செய்யவும்.
இதனை தினமும் பயன்படுத்தினால், உங்கள் முகம் சமமாக இருக்கும். தக்காளி மற்றும் அரிசி ஃபேஸ் பேக் பயன்படுத்தும் பொழுது சரும வறட்சி, சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மற்றும் வைட்டமின் சி குறைபாட்டு பிரச்சினைகள் இல்லாமல் போகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |