வாரத்திற்கு ஒருமுறை போடுங்க.. டல்லா இருக்குற முகம் பொலிவாகும்
தற்போது இருக்கும் பரபரப்பான வாழ்க்கை முறையில் வேலைக்கு சென்று வீடு திரும்புவதே பெரிய வேலையாக மாறி விட்டது. காலையில் வேலைக்கு சென்றால் இரவு வீட்டிற்கு திரும்பியவுடன் சிலர் சாப்பிட்டு விட்டு உறங்கி விடுவார்கள்.
இப்படி வாரத்திற்கு 5-6 நாட்கள் வேலை செய்து விட்டு, விடுமுறை நாளில் நன்றாக ஓய்வெடுப்பது வழக்கமாகி வருகின்றது.
இதற்கிடையில் சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பில் கவனம் செலுத்துவது குறைந்து விட்டது. இப்படி ஒருவர் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்காமல் இருந்தால் நாளடைவில் சருமத்தில் முகப்பரு, கரும்புள்ளிகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் வந்து சருமம் பார்க்கவே முடியாத அளவுக்கு மாறி விடும்.
இது போன்ற பிரச்சினைகைள தவிர்க்க வேண்டுமானால், தினமும் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க முடியாவிட்டாலும், வாரத்திற்கு ஒருமுறையாவது சருமத்திலுள்ள அழுக்குகளை அகற்ற பேக் போடுவது அவசியம்.
இந்த பராமரிப்பு முறையால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும்.
அந்த வகையில், சோர்வாக இருக்கும் முகத்தை பொலிவாக்கும் Face pack எப்படி தயாரிக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
மஞ்சள்+ தயிர் Face pack
- மஞ்சள், தயிர் இரண்டையும் ஒரு பவுலில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
- அந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி சரியாக 20 நிமிடம் ஊற வைக்கவும்.
- பேக் நன்றாக காய்ந்தவுடன் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
- இந்த பேக் வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால், முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
2. தேன்+ எலுமிச்சை Face pack
- தேன், எலுமிச்சை இரண்டையும் ஒரு பௌலில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
- முகத்தை நன்றாக கழுவிய பின்னர், இந்த பேக்கை போட்டு, சரியாக 15-20 நிமிடம் ஊற வைக்கவும்.
- நேரம் சரியாக வந்ததும் வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
- இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் அழுக்குகள் நீங்குவதோடு, முகம் பளிச்சென்று இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |