வீட்டில் செல்லப்பிராணி வளர்ப்பவரா நீங்க? அப்போ “இத” மட்டும் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக நாய்கள், பூனைகள், கிளிகள் மற்றும் பிற விலங்குகளை பலர் வீட்டில் செல்லபிராணியாக வளர்த்து வருகிறார்கள்.
சிலருக்கு செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடும் தருணங்கள் மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றன. ஆனால் அவற்றை வீட்டில் வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.
விலங்குகளுடன் சிறிது நேரத்தை செலவிட வேண்டும், அவர்களை அன்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும், அவர்களுக்கு உணவளிக்க வேண்டும், அவைகளுடன் விளையாட வேண்டும் மற்றும் அவைகளை ஆரோக்கியமாக கவனித்து கொள்ள வேண்டும் என பல தேவைகள் உள்ளன.
அந்த வகையில், செல்லபிராணி வளர்ப்பவர்கள் அவைகளை வளர்க்க முன்னர் குறிப்பிட்ட சில விடயங்கள் குறித்து தெரிந்து கொள்வது அவசியம். அப்படியானவை தொடர்பில் கீழுள்ள பதிவில் பார்க்கலாம்.
நேரம்
செல்லப்பிராணி வளர்க்கும் முன்னர் அவைகளை பார்த்து கொள்ள நீங்கள் சரியானதொரு நேரம் ஒதுக்க வேண்டும்.
உதாரணமாக நீங்கள் நாய்களை விரும்புகின்றீர்கள் என்றால் அந்த நாய்களை தினமும் நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்று விளையாட வேண்டும். இது தவிர நாய்க்குட்டிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
பூனைகளும் நம்மிடம் விளையாட விரும்புகின்றன. எனவே சிறிது நேரம் ஒதுக்கி அதனுடன் விளையாட வேண்டும். கிளி அல்லது மீன் வளர்க்கும் நபராக இருந்தால் அவற்றின் கூண்டுகள் அல்லது தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
விலங்குகளுக்கு வயதாகி இருந்தால் கூடுதல் கவனிப்பை வழங்க வேண்டும். அத்துடன் நோயிடமிருந்து பாதுகாக்க மருத்துவரிடம் அழைத்து செல்வது அவசியம்.
செல்லப்பிராணிகள் தினமும் உரிமையாளருடன் நேரத்தை செலவிட விரும்பும். இப்படி பார்த்துக் கொள்ள முடிந்தவர்கள் தாரளமாக செல்லபிராணிகள் வளர்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
