தொடரும் இளம் வயது மாரடைப்பு மரணம் - தவிர்க்க செய்ய வேண்டியது என்ன?
இந்தியாவில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. ஏனெனில் இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் இதன் அபாயத்தை பன்மடங்கு அதிகரிக்கிறது.
இதய நோய்கள் பொதுவாக வயதானவர்களை தான் தாக்கும் ஆனால் இன்றைய தலைமுறையில் இளைஞர்களையே அதிகம் தாக்குகிறது.
அந்த வகையில், கடந்த நாளில் பிரபல திரைப்பட விமர்சகர் கௌஷிக் இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
எனவே இளம் வயது மாரடைப்பை தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
தவிர்க்க வேண்டியவை
* அதிகம் வறுத்த உணவுகள், பதப்படுத்திய உணவுகள், எண்ணெய் சேர்த்த உணவுகள், குளிர்பானங்கள், ஃபாஸ்ட் ஃபுட்ஸ், கொழுப்புச்சத்து உணவுகளை தவிர்க்க வேண்டும்.
*இதய ஆரோக்கியத்திற்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த ரத்தம் அடிப்படையத் தேவையாக இருக்கிறது.
* இட்லி, தோசை, பானிபூரி, மசாலா பூரி, பிரியாணி, நூடுல்ஸ் என்று வாங்காமல் சிறுதானிய உணவு விடுதிகளில் சத்துமிக்க உணவை எடுத்துக்கொள்ளலாம்.
* 18 வயது முதல் 20 வயது போன்ற வயதில் ஏற்படும் இதயப் பிரச்சனைகள் மரபு வழி சிக்கலாகவே இருக்கும்.
* தாய் தந்தைக்கு யாருக்கேனும் இதயப்பிரச்சனை இருந்தால் பிள்ளைகளுக்கும் கூடுதல் கவனம் தேவை
* ரத்த கொதிப்பு சர்க்கரை நோய் கொலஸ்ட்ரால் ஆகியவற்றை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
* மாரடைப்பு முக்கிய அடுத்த காரணம் உடல் பருமன் தான்
* உயரத்துக்கு ஏற்ற எடையை பராமரிக்க வேண்டும்.
* அமர்ந்தபடியே வேலை செய்ய வேண்டியுள்ளவர்கள் குறிப்பிட்ட மணி நேரத்திற்கு ஒரு முறை இடைவெளி எடுத்து அருகருகே நடப்பது நல்லது.
* புகைப்பழக்கம், மதுப்பழக்கத்தை விடுவதே இப்பிரச்சினைக்களுக்கான முதலும் முக்கியமான தீர்வு