நீரிழிவு நோயாளிகளே பச்சை பயிறு கிரேவி சாப்பிட்டு இருக்கிங்களா? இனி இப்படி செய்து ருசியுங்கள்!
பச்சை பயிறு கிரேவி நீரிழிவு நோயாளிகள் முதல் எடை குறைக்க விருப்பம் உள்ளவர்கள் வரை அனைவரும் அச்சம் இன்றி சாப்பிடலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
பச்சை பயறில் நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்தது .

தேவையான பொருட்கள்
- பச்சை பயறு - 1 கப்
- பெரிய வெங்காயம் - 2
- தக்காளி - 2 பூண்டு
- இஞ்சி விழுது - 1 மேஜைக்கரண்டி
- மஞ்சள் தூள் - ½ மேஜைக்கரண்டி
- சீரகம் - ½ மேஜைக்கரண்டி
- கரம் மசாலா - 1 மேஜைக்கரண்டி
- மல்லி தூள் - 1 மேஜைக்கரண்டி
- சீரக தூள் - ½ மேஜைக்கரண்டி
- பிரிஞ்சி இலை - 1
- மிளகாய் தூள் - தேவையான அளவு எண்ணெய்
- நெய், உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை பயறை நன்கு சுத்தம் செய்து கழுவி 4 மணி நேரம் வரை ஊற வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, சீரகத்தை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு நன்கு கலந்து விட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், சீரக தூள், கரம் மசாலா, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
பின்பு அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு தக்காளி குழையும் வரை வதக்கவும். தக்காளி நன்கு மசிந்ததும் நாம் ஊற வைத்திருக்கும் பச்சை பயரை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி போட்டு சுமார் 5 விசில் வரும் வரை வேக விடவும். 5 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அதை எடுத்து சப்பாத்தியுடன் சுட சுட பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சத்தான பச்சை பயறு கிரேவி தயார்.