சோம்பு விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊர வைத்து குடித்தால் என்ன நடக்கும்....இனி தெரிஞ்சிட்டு குடிங்க!
பெருஞ்சீரகம் என்று அழைக்கப்படும் சோம்புவை தினமும் சாப்பிட்டால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை பெற்று கொள்ள முடியும்.
இந்த சோம்பு பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் உணவின் மணத்தையும், சுவையையும் அதிகரிக்கின்றது.
அத்தோடு தினமும் உணவில் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பல நோய்களை குணப்படுத்தும் மருத்துவ பொருளாக சோம்பு செயல் படுகின்றது.
இந்தகைய சக்தி வாய்ந்த சோம்பினை ஊரவைத்து குடித்தால் எடை குறையுமாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெருஞ்சீரக விதைகளை 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
ஊட்டச்சத்து அளவுகள்
- கலோரிகள் - 19.8
- நார்ச்சத்துக்கள் - 2.3
- கிராம் கார்போஹைட்ரேட்டுகள்- 3
- கிராம் புரதம்- 0.9 கிராம்
- கொழுப்பு 0.6 கிராம்
- கொழுப்பு- 0
எப்படி தயாரிப்பது?
ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரக விதையை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்த்து ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
காலையில் இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
அல்லது நீங்கள் காலையில் சோம்பு டீ போட்டும் குடிக்கலாம்.
இதனால் எடை குறைவது மட்டும் இன்றி கிடைக்கும் பிற நன்மைகளை பின்வருமாறு
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது
ஒருவரின் உடல் செல்கள் ஆற்றலைப் பயன்படுத்தும் விகிதத்தை வளர்சிதை மாற்றம் (metabolism) தீர்மானிக்கிறது. அந்த வகையில் சோம்பு வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவுகிறது. குறிப்பாக வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது அவை அதிக நன்மைகளை தருகின்றன.
பசியை கட்டுப்படுத்த உதவும்
பெருஞ்சீரக(சோம்பு) விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் வயிற்றை நீண்ட நேரத்திற்கு முழுமையானதாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் நீங்கள் அதிகப்படியான உணவு உட்கொள்வதை தவிர்க்க முடியும். நீங்கள் நிறைவாக உணரும் போது, ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது குறையும். இது உங்கள் எடையை குறைக்க உதவுகிறது.
நச்சுத்தன்மையை அகற்ற உதவுகிறது
சோம்பு ஒரு இயற்கையான நச்சு நீக்கி ஆகும். எனவே நீங்கள் சாப்பிட்ட பிறகு இதனை உட்கொள்ளும் போது உங்கள் உடலில் சில அதிசயங்களை சோம்பு செய்கிறது. இது உங்கள் உடலில் இருந்து பல்வேறு நச்சுக்களை வெளியேற்றி உங்கள் செரிமான அமைப்பை சீராக்குவதன் மூலம், செரிமானத்தை எளிதாக்குகிறது.
சத்துக்கள் நிறைந்தது
சோம்பில் துத்தநாகம், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் மாங்கனீசு போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஃப்ரீ ரேடிக்கல்கள் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் இவை உடல் பருமன் மற்றும் பல நோய்களுக்கு வழிவகை செய்கின்றன.
செரிமானத்திற்கு உதவுகிறது
சோம்பு, ஃபென்கோன் மற்றும் அனெத்தோல் போன்ற பெருஞ்சீரக விதைகளில் உள்ள எண்ணெய்கள் இரைப்பைச் சாறுகளின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகின்றன. நாம் அனைவரும் அறிந்தபடி, ஆரோக்கியமான செரிமானம் ஆரோக்கியமாக உடல் எடையை குறைப்பதற்கான திறவுகோலாகும்.