பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பூண்டு
இந்திய மாநிலமான தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டு சமையலிலும் முக்கிய இடம் பிடிப்பது பூண்டு ஆகும். ஆனால் சிலர் பூண்டை ஒதுக்கி வைக்கவும் செய்கின்றனர்.
ஆனால் பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், பல நன்மைகளை பெற முடியும் என்பதை பலரும் மறந்துவிடுகின்றனர். ஆம் பூண்டில் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றது.
தற்போது பூண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
நன்மைகள் என்ன?
பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக மாற்றுவதுடன், சளி இருமல் போன்ற நோய் தொற்றுகளை அகற்றுகின்றது. மேலும் உடலில் ரத்த அழுத்தம் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை காக்கவும், ரத்த ஓட்டம் சீராக இருக்கவும் உதவுகின்றது.
இன்சுலின் உணர்திறமை அதிகரிப்பதால் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கவும், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லதாகவும் இருக்கின்றது.
செரிமான என்சைம்களை தூண்டி வயிறு உப்புசம், வாயு தொல்லை போன்றவற்றினை நீக்குவதற்கு உதவி செய்கின்றது.

தீங்கு விளைவிக்கு நச்சுக்களை மனித உடலிலிருந்து வெளியேற்றவும், கல்லீரல் செயல்பாட்டினை துரிதப்படுத்தவும், செரிமான மைப்பினை சுத்தம் செய்து, உடம்பில் கெட்ட கொழுப்பினை குறைக்கவும் செய்கின்றது..
மெட்டாபாலிசத்தை ஊக்குவித்து உடம்பில் தேவையற்ற கொழுப்பு சேராமல் தடுப்பதுடன், பசி உணர்வையும் கட்டுப்படுத்துகின்றது. முகப்பருக்கான பாக்டீரியாக்களை அளித்து சரும ஆரோக்கியத்தினை மேம்படுத்தி, வயதான தோற்றம் ஏற்படாமலும் தடுக்கின்றது..

பூண்டு பற்கள் இரண்டை எடுத்து சாப்பிட்டு, வெதுவெதுப்பான நீரை குடிக்கலாம். ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடாமல் இருக்கவும். ஏனெனில் இவை அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்துகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |