தினமும் ரசம் சாதம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் இருக்கா? இப்படி ஒரு செய்து அசத்துங்க
தென்னிந்திய உணவுகளில் மிகவும் பிரபலமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி தான் ரசம். பெரும்பாலான வீடுகளில் மதிய உணவுக்கு நிச்சம் ரசம் இல்லாமல் இருக்காது.
அப்படி வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில், மக்களால் விரும்பி உண்ணப்படும் ரசமானது புளிச்சாறு, தக்காளி, மிளகு, சீரகம், பெருங்காயத் தூள் போன்ற முக்கிய மருத்துவ குணங்கள் நிறைந்த மசாலா பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால், செரிமான அமைப்பின் ஆரோக்கியத்துக்கு பெரிதும் துணைப்புரியும்.

மேலும், மலச்சிக்கல், அஜீரண கோளாறுகளையும் நீக்கும் ஆற்றல் ரசத்துக்கு உண்டு.ரசத்தில் உள்ள புளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தைத் தாக்கும் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுத்து நல்ல பாதுகாப்பை அளிக்கிறது. இதன் விளைவாக சருமம் நீண்ட காலம் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் தோற்றமளிக்கும்.
குறிப்பாக ரசத்தில் மிளகு முக்கியமான பொருளாக இருப்பதால், இந்த உள்ள பெப்பரைன் என்னும் பொருள் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிப்பதில் ஆற்றல் காட்டுகின்றது.

இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த ரசத்தை எப்போதும் ஒரே பாணியில் செய்யாமல் சற்று வித்தியாசமான முறையில், அசத்தல் சுவையில், பொரித்த ரசம் எவ்வாறு செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வேக வைத்த துவரம் பருப்பு - 1/4 கப்
புளி தண்ணீர் - 1/2 கப்
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1 தே.கரண்டி
பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி
நெய் - 2 தே.கரண்டி
மிளகு - 1 1/2 தே.கரண்டி
சீரகம் - 1 1/2 தே.கரண்டி
வெந்தயம் - 1/4 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
வரமிளகாய் - 4
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
கடலைப் பருப்பு - 1 தே.கரண்டி
மல்லி - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
வெல்லம் - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை
முதலில் ஒரு பாத்திரம்தை அடுப்பில் வைத்து, அதில் புளிச்சாற்றினை சேர்த்து, அத்துடன் ரசத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, அதில் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், சிறிது கறிவேப்பிலை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது வெல்லத்தை சேர்த்து கலந்து மிதமான தீயில் வைத்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
அதகையடுத்து அடுப்பில் இன்னொரு பாத்திரத்தை வைத்து, அதில் மல்லி, மிளகு, சீரகம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வந்து நிறம் மாறும் வரை நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பருப்பை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி, நுரைக்கட்ட ஆரம்பித்ததும், அதை இறக்கி கொத்தமல்லியைத் தூவ வேண்டும்.
கடைசியாக ஒரு சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, ரசத்துடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் அசத்தல் சுவையான பொரித்த ரசம் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |