குரு வக்ர நிவர்த்தியால் இந்த 4 ராசிக்கு மட்டும் தன லாபம்! 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ராசியில் உக்கிரமாக இருக்கும் குரு
நவகிரகங்களில் சுப கிரகமாக கருதப்படும் குரு பகவான் தனது சொந்த ராசியான மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.
குரு பகவான் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் தனது சொந்த ராசிக்கு வந்துள்ளதோடு, அந்த ராசியில் வக்ரமாகவும் உள்ளார்.
இந்நிலையில் நவம்பர் 24 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி அடைந்து, தனது சொந்த ராசியில் நேர்பாதையில் பயணிக்கவுள்ளார்.
குருவின் இந்த இயக்கத்தால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலனைப் பெறவுள்ளார்கள்.
குறிப்பாக 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மேன்மேலும் பிரகாசிக்கப் போகிறது.
அந்த ராசிக்காரர்கள் யார் யார்?
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாகும். எனவே இக்காலத்தில் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது.
அதோடு புதிய வருமானத்திற்கான ஆதாரங்களும் உருவாக்கப்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் வணிகர்கள் ஒரு புதிய ஒப்பந்தத்தால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வாகனம் வாங்கவும், சொத்து வாங்கவும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இது வேலை, வணிகம் மற்றும் பணியிடத்தின் வீடாகும். ஆகவே இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும்.
பணிபுரிபவர்கள் பணியிடத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு புதிய ஆர்டர் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வணிக உறவுகளால் உங்களின் வணிகம் விரிவடையும்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணத்தின் வீடாகும். எனவே இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் தடைபட்ட பணிகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். வணிகம் தொடர்பான பயணம் மேற்கொள்ள நேரிடும்.
இப்பயணத்தால் நல்ல ஆதாயம் கிடைக்கும். வெளிநாடுகளுடன் தொடர்புடைய வணிகர்கள் குருவால் நல்ல லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு குரு வக்ர நிவர்த்தி காலம் மங்களகரமானதாக இருக்கும். ஏனெனில் குரு கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இது பணம் மற்றும் பேச்சின் வீடாகும்.
எனவே இக்காலத்தில் திடீர் பண ஆதாயங்கள் கிடைக்கும். பேச்சு மற்றும் மார்கெட்டிங் தொடர்பான வேலைகளை செய்பவர்களுக்கு அற்புதமான காலமாக இருக்கும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் பணியிடத்தில் பாராட்டுக்களைப் பெறுவார்கள்.