12 வருடங்களின் பின் மிதுனத்தில் குரு - பணத்தை அள்ளப்போகும் ராசிகள்
மார்ச் 11, 2026 அன்று குரு பகவான் மிதுன ராசியில் நேரடி பயணத்தை தொடங்க இருக்கிறார். இவரது பெயர்ச்சி பல ராசிகளுக்கு நல்ல தாக்கத்தை உண்டாக்கும்.

மிதுனத்தில் குரு
ஜோதிடத்தில் குரு பகவான் மங்களகரமான கிரகமாக அறியப்படுகிறார். இவர் அறிவு, செல்வம், திருமணம், உயர் கல்வி, அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார்.
தற்போது குரு பகவான் மிதுன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இது பல ராசிகளுக்கு பலனை அள்ளி தரும்.
வரும் மார்ச் 11ஆம் தேதி அவர் மீண்டும் நேரடி பயணத்தை தொடங்க உள்ளார். 12 வருடங்களுக்குப் பிறகு இந்த அரிய நிகழ்வு நடைபெற இருக்கிறது. இதனால் உண்டாகப்போகும் நன்மை பல ராசிகளின் தலையெழுத்தை மாற்றும். அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
- குரு பகவானின் நேரடி இயக்கத்தால் மேஷ ராசிக்காரர்கள் அதிக நன்மை பெறுவார்கள்.
- குரு மேஷ ராசியில் தனது நேரடி பயணத்தை தொடங்குகிறார்.
- இது வீடு, தைரியம் மற்றும் உடன்பிறப்புகளை குறிக்கும் இடமாகும் என ஜோதிடத்தில் கூறப்படுகின்றது.
- இதனால் தைரியம், வீரம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- நீங்கள் செய்யும் தொழிலில் மிகப்பெரிய மாற்றம் உருவாகும்.
ரிஷபம்
- குரு பகவானின் நேரடி இயக்கம் உங்களுககு பல வழிகளில் நன்மைகளை தரும்.
- உங்கள் பொருளாதார நிலை உயரும்.
- வீட்டில் பொன், பொருள், ஆபரணங்களின் சேர்க்கை நடைபெறும்.
- தொழில் செய்து வருபவர்கள் தொழிலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
மிதுனம்
- குரு பகவான் மிதுன ராசியின் லக்ன வீட்டில் நேரடி பயணத்தைத் தொடங்குகிறார்.
- உங்களுக்கு பல வழிகளில் இருந்து நன்மைகள் கிடைக்கும்.
- இதுவரை இருந்த மன அழுத்தம் இல்லாமல் போகும்.
- உங்கள் குழந்தைகள் விடயத்தில் நீங்கள் நன்மை பெறுவீர்கள்.
- புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
- வீட்டில் அடுத்தடுத்து சுப காரியங்கள் நடைபெறும்.
- மாணவர்களாக இருந்தால் அதில் நீங்கள் அதிக நன்மைகள் பெறுவீர்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).