Ethirneechal: துப்பாக்கி முனையில் மருமகள்கள்! ஜீவானந்தத்தை கண்டுபிடித்த குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தத்தை குணசேகரன் கண்டுபிடித்த நிலையில், துப்பாக்கி முனையில் வீட்டு மருமகள்கள் தவித்து வருகின்றனர்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் தர்ஷனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார். மற்றொரு புறம் வீட்டு பெண்களையும் ஹோட்டல் தொழில் செய்வதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அறிவுக்கரசியின் பாதுகாப்பில் இருந்த தர்ஷன் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி கொடைக்கானலில் ஜீவனந்தத்திடம் சேர்ந்துள்ளார்.
இதே போன்று பார்கவியும் அவரது தந்தையும் ஜீவானந்தத்திடம் சேர்ந்துள்ள நிலையில், இதனை அறிந்த குணசேகரன் குடும்ப பெண்களை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளார்.
கதிர் மற்றும் அறிவுக்கரசி இருவரும் ஜீவானந்தத்தை பிடிப்பதற்கு கோபமாக செல்கின்றனர். கதையின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
