ஓடும் இரயிலில் தவறி விழுந்த பயணி.. நொடிப்பொழுதில் காப்பாற்றிய வைரல் வீடியோ
ஓடும் ரயில் விபத்தில் இருந்து தப்பிக்கும் வீடியோக்கள் அடிக்கடி வருவது உண்டு. மேலும், ஓடும் இரயிலில் ஏறுவது, இறங்குவது பெரும் விபத்தை ஏற்படுத்தும், அது உங்களின் உயிரை நொடிப்பொழுதில் காவு வாங்கிவிடும் என்று பலவிதமான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இருந்தாலும், சிலர் பல காரணங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளையில், ஓடும் இரயிலில் ஏறி தவறி விழுந்து காப்பாற்றப்படும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், குஜராத் ஜூனகத் (Junagadh) இரயில் நிலையத்தில் இரயில் பயணி ஓடும் இரயிலில் ஏற முயற்சித்து தவறி விழவே, அவரை இரயில்வே பணியாளர் காப்பாற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனாகாத் இரயில் நிலையத்தில் பயணி ஒருவர் ஓடும் இரயிலில் ஏற முயற்சித்துள்ளார்.
அப்போது அவரது கால்கள் வலுக்கிய நிலையில், இரயில் மெதுவாக நகர்ந்ததால் இரயிலுடன் சேர்த்து இழுக்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு எதற்ச்சையாக சென்றிருந்த இரயில்வே நிலைய தலைமை வணிக எழுத்தர் அசோக் முராணி, உடனடியாக சுதாரித்து அவரை காப்பாற்றியுள்ளார். இது தொடர்பான வீடியோவை இரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
गुजरात के जूनागढ़ रेलवे स्टेशन पर चलती ट्रेन में चढ़ने का प्रयास करते यात्री का पैर फिसल गया किन्तु प्लेटफॉर्म पर उस समय मौजूद मुख्य वाणिज्य लिपिक श्री अशोक मुरानी ने तुरंत खींच कर उन्हें मौत के मुंह से बचा लिया।
— Ministry of Railways (@RailMinIndia) June 18, 2021
आपसे अनुरोध है चलती ट्रेन में चढ़ने एवं उतरने का प्रयास न करें। pic.twitter.com/3uyn6ibXy0