Getti Melam: சைக்கோ கணவரின் உண்மைமுகம்! பேரதிர்ச்சியில் அஞ்சலி
கெட்டி மேளம் சீரியலில் மகேஷின் சுயரூபத்தை சிசிடிவி காட்சியில் அவதானித்த அஞ்சலி பேரதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
கெட்டி மேளம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று கெட்டி மேளம். திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணியளவில் ஒளிபரப்பாகிவரும் நிலையில், இதற்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
அதாவது கணவரின் உடல்நிலையைக் குறித்து அறிவதற்கு அஞ்சலி பல முயற்சிகள் செய்து வரும் நிலையில், செக்யூரிட்டி உன் கணவர் சைக்கோ என்று கூறியுள்ளார்.
இதனை கேட்ட அஞ்சலிக்கு நம்பிக்கை இல்லாமல் கணவரை நம்புகின்றார், கணவரை எப்படியாவது மாற்றிவிடலாம் என்றும் அவருடன் வாழ்ந்து வருகின்றார்.
தற்போது மகேஷின் நண்பர் வீட்டிற்கு வந்த நிலையில், மகேஷ் குறித்த உண்மையை அஞ்சலியிடம் கூறிவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் நண்பன் என்றும் பாராமல் மிகக் கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதனை அவதானித்த பாட்டி உண்மையைக் கண்டறிந்ததால், அவரையும் கீழே தள்ளிவிட்டு கோமா நிலைக்கு செல்ல வைத்துள்ளார்.
இந்நிலையில் மகேஷின் சிசிடிவி விடயம் அஞ்சலிக்கு தெரியவந்த நிலையில், இதனை அவதானித்த அஞ்சலிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
ஆம் பாட்டியை கீழே தள்ளிவிடுவது அதில் பதிவாகியிருந்த நிலையில், இந்த உண்மையை அறிந்த அஞ்சலி அடுத்து என்ன செய்யப்போகின்றார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |