ஜெனிலியாவிற்கு ஏற்பட்ட சோகம்... வைரலாகும் சோகமான காணொளி
நடிகை ஜெனிலியா அன்னையர் தினத்தன்று கொரோனா தொற்று குறித்து மிகவும் உருக்கமான காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தமிழில் 2003ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் ஜெனிலியா. பின்பு முன்னனி நடிகரான விஜய்யுடன் நடித்த இவர் இந்தி நடிகர் ரிதீஸ் என்பவரை திருமணம் செய்து இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
சமீபத்தில் குழந்தைகளின் சந்தோஷத்திற்கு ஸ்கேட்டிங் விளையாடிய இவர் தவறி கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவதிப்பட்டார்.
தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட ஜெனிலியா, பின்பு தனது கணவருக்கும் குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டு மீண்டு வந்தனர்.
இந்தத் தகவலை தற்போது அன்னையர் தினத்தை முன்னிட்டு மீண்டும் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு காட்டிய அவர் “இதுபோன்ற நேரங்களில் ஒரு அன்னையாக இருப்பது சவாலான விஷயம். ஆனால் இதுபோன்ற நேரங்களில் ஒவ்வொரு அம்மாவும் மிகவும் வலிமையானவராக இருக்க வேண்டும்.
குழந்தைகளை பாதுகாப்பான முறையில் வைத்து இருக்க வேண்டும். அதோடு மன வலிமையோடு இருப்பது மிகவும் முக்கியமான விஷயம். ஏனென்றால் ஒரே சமயத்தில் எனது இரு குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதைப்போல எனது கணவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
எனவே இதுபோன்ற சமயங்களில் ஒரு அன்னை வலிமையானவராக இருந்து அனைவரையும் வழிநடத்த வேண்டும். கொரோனாவிற்கு எதிரான பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்” என உருக்கமாக வெளியிட்டுள்ள காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.