கங்கை கரையில் கொத்து கொத்தாக வெளிவரும் சடலங்கள்... காரணம் என்ன?
இந்தியாவில் உத்திர பிரதேச மாநிலத்தில் அலகாபாத்(பிரயாக்ராஜ்) மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையினால் கங்கை கரையோறம் புகைப்பட்ட சடலங்களில் 70க்கும் மேற்பட்ட சடலங்கள் வெளியே தெரிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பெய்துவரும் பருவமழையினால் கங்கையில் நீரின் அளவு வேகமாக அதிகரித்து, கரைகளை அரித்து வருகின்றது.
இதன் விளைவாக, கங்கை கரையோரத்தில் உள்ள பாபமாவ் காட்டில் புதைக்கப்பட்ட ஏராளமான உடல்கள் மீண்டும் வெளியே தெரியும் நிலைக்கு வந்துள்ளன.
இன்றுவரை, பிரயாக்ராஜ் மாநகராட்சியின் மண்டல அதிகாரிகள் 24 சடலங்களை தகனம் செய்துள்ள நிலையில், தற்போது, கங்கை கரையில் புதைக்கப்பட்ட சுமார் 70 உடல்கள் வெளியில் தெரியும் நிலையில் உள்ளன.
அவற்றையும் தகனம் செய்வ்தற்கான பணிகளில் அதிகாரிகள் குழு செயல்பட்டு வருகின்றது. தகனம் செய்யும் போது அனைத்து சடங்குகளும் எந்த குறைபாடும் இல்லாமல் பின்பற்றப்படுவதை மண்டல அதிகாரி நீரஞ் சிங் உறுதி செய்து வருகின்றார்.
கங்கைக் கரையில் புதைக்கப்பட்ட உடல்களை தகனம் செய்யும் இந்த நடைமுறை ஜூன் 4 ஆம் தேதி தொடங்கியுள்ளது.
கொரோனா பிரச்சனை காரணமாக ஏராளமான உடல்கள் கங்கை ஆற்றின் கரையோரம் தூக்கிவீசப்பட்டது. அதையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்டுபிடித்தும் தகனம் செய்து வந்த அதிகாரிகள் தற்போது மழை காரணமாகவும் பிணங்களை தகனம் செய்யும் வேலையை செய்ய தொடங்கி உள்ளனர்.