வீட்டில் விஷப்பாம்புகள் நுழைய கூடாதா? இந்த நான்கு பொருட்கள் இருந்தா போதும்
வீட்டிலும் தோட்டத்திலும் பாம்புகள் நடமாடுவது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஒரு பெரிய அச்சமாக இருக்கலாம். ஆனால் இப்பதிவை படித்ததன் பின்னர் அதற்கான பயம் தேவை இல்லை.
பாம்புகள் விரட்டும் பொருட்கள்
எவ்வளவு தைரியமாக இருந்தாலும், திடீரென ஒரு பாம்பைப் பார்த்தால் பயம் ஏற்படுவது இயல்பே. அதுவும் உங்கள் வீடு அல்லது தோட்டம் போன்ற பாதுகாப்பான இடங்களில் பாம்பு நடமாட்டம் இருந்தால், அது நிச்சயமாக உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் பெரும் அச்சமாக இருக்கலாம்.
தோட்டத்தில் இருக்கும் மரங்கள், செடிகள், குப்பைகள் ஆகியவை பாம்புகளுக்குப் பாதுகாப்பான தங்குமிடமாக உருவாகலாம். இதை சுலபமான முறையில் விரட்ட முடியாது.இதை குறிப்பிட்ட நான்கு பொருட்கள் கொண்டு விரட்ட முடியும்.
நாப்தலீன் - என்பது பாம்புகளை விரட்டும் சிறந்த மற்றும் எளிய வீட்டு வைத்தியமாகக் கருதப்படுகிறது. இதன் திருப்பும் வாசனையை பாம்புகள் மிகவும் வெறுக்கின்றன. சாதாரண பாம்புகளாக இருந்தாலும் அல்லது விஷப் பாம்புகளாக இருந்தாலும், உங்கள் வீட்டைச் சுற்றி அவை சுற்றிக்கொள்வதையே விரும்பமாட்டீர்கள்.
பாம்புகளை உங்கள் வீடு, தோட்டம் மற்றும் சுற்றுப்புறத்திலிருந்து விலக்க நினைத்தால் நாப்தலீனை பயன்படுத்து சிறந்தது. முதலில் நான்கு முதல் ஐந்து நாப்தலீன் பந்துகளை நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு, அதில் ஒரு முதல் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து ஒரு கரைசலாக தயாரிக்கவும். தயாரான இந்தக் கரைசலை தோட்டத்திலுள்ள மரங்கள், செடிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தெளிக்கலாம்.
மேலும், உங்கள் வீட்டு ஜன்னல் மற்றும் கதவுப் பகுதியில் தெளித்தால் பாம்புகள் நெருங்கவே முடியாது.
அம்மோனியா - இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி அம்மோனியாவுடன் ஒன்று முதல் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து ஒரு கலவையைத் தயார் செய்யுங்கள்.
பின்னர், அந்தக் கலவையை ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி, உங்கள் வீட்டு சுற்றுப்புறத்தில் உள்ள மரங்கள், செடிகள் மற்றும் பூக்கள் மீது தெளிக்கவும்.
கிராம்பு - தோட்டத்தில் பாம்புகள் வருவதைத் தடுக்க கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை எண்ணெய்கள் சிறந்த இயற்கை தீர்வாக செயல்படுகின்றன. இந்த எண்ணெய்களில் இருக்கும் சக்திவாய்ந்த வாசனை பாம்புகளை கடுமையாகத் தொந்தரவு செய்யும், அதனால் அவை அந்த இடத்திற்கே வரவே விரும்பாது.
சல்பர் - சல்பர் பவுடரை தண்ணீரில் கலந்து ஒரு கரைசலாக தயாரித்து, அதை தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தெளிக்கவும். இந்த கரைசலின் திருப்பும் வாசனை பாம்புகளை தடுக்க மிகவும் பயனாகும். அந்தப் பகுதிக்குத் திரும்பிப் பார்க்கவே அவை தயங்கும்! இயற்கையான முறையில் பாதுகாப்பை உருவாக்க விரும்பினால் இந்தச் சுலபமான வழியை முயற்சி செய்யலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
