நாவல் பழம் சாப்பிட்ட பின்பு இந்த உணவுகளை மறந்தும் கூட சாப்பிட்ராதீங்க
நாவல் பழம் சாப்பிட்ட பிறகு எந்தெந்த உணவை சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
நாவல் பழம்
நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் B, பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
நாவல் மரத்திலுள்ள இலை, மரப்பட்டை, விதை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.

ஹீமோகுளோபின் அளவினை மேம்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் செய்கின்றது. அதுமட்டுமின்றி நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த நண்பனாக இருப்பதுடன், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
நாவல் பழ சீசன் ஆரம்பித்துவிட்டால் இதனை வாங்கி சாப்பிடுவதற்கு மறந்துவிட வேண்டாம். நாவல் பழம் சாப்பிட்ட பிறகு எந்தெந்த உணவை சாப்பிடக்கூடாது என்று இங்கு கீழே காணலாம்.
என்ன சாப்பிடக்கூடாது
ஊறுகாய் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் நாவல் பழம் மற்றும் ஊறுகாய் இரண்டிலும் அமிலத்தன்மை இருப்பதால் இது நம் உடலுக்குள் சென்று நெஞ்செரிச்சல் அஜிரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் நாவல் பழம் சாப்பிட்ட பின்பு எந்தவொரு புளிப்பு சாப்பிடுவதாக இருந்தாலும் ஒரு மனி நேரம் கழித்து தான் சாப்பிட வேண்டும்.
மஞ்சள் அதிகம் சேர்த்துள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது. என்னதான் மஞ்சள் நம் உடலுக்கு நன்மை என்றாலும், நாவல் பழம் சாப்பிட்ட பின்பு மஞ்சள் சேர்த்த உணவுகள் சாப்பிட்டால் இது வயிற்று எரிச்சல், குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக்கூடாது. ஏனென்றால் நாவல் பழம் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய ஒன்று ஆனால் எண்ணெயில் பொரித்த உணவுகள் அல்லது இனிப்பு பலகாரங்கள் எல்லாம் செரிமானமாக சில நேரம் ஆகும். இவை இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டால் வாயுத்தொல்லை, உப்புசம் போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம்.
நாவல் பழம் சாப்பிட்ட பின்பு பால் குடிக்ககூடாது. ஏனென்றால் நாவல் பழம் புளிப்பு சுவை கொண்டது. இதனால் நாம் குடிக்கும் பாலை திரியச் செய்யும். இதனால் குமட்டல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனையை தவிர்க்க நாவல் பழம் சாப்பிட்ட பின் ஒரு மனி நேரம் கழித்து பால் குடிக்கலாம்.

நாவல் பழம் சாப்பிட்டு தண்ணீர் குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு ஆனால் தண்ணீரும் குடிக்கக்கூடாது. ஏனென்றால் இது நம் வயிற்றில் உள்ள செரிமான சாறுகளை நீர்த்துப்பாக செய்யும். இதனால் வயிற்றுப்போக்கு, உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |