அடடா! களிமண் கப்புகளில் டீ குடிப்பது இவ்வளவு நன்மையை தருமா?
பொதுவாக களிமண்ணால் செய்யப்பட்ட கப்களில் டீ, காபி குடிப்பது ஆரோக்கியமானதாக கருதப்படுகின்றது.
ஏனெனில் மற்ற மண்பாண்டங்களைப் போலவே களிமண் கப்கள் சூளையில் சுடுவதன் மூலம் தயாராகிறது. களிமண் கோப்பை அதில் ஊற்றப்படும் சூடான திரவங்களை லேசாக உறிஞ்சுகிறது.
அதுமட்டுமின்றி தனித்துவமான மண் வாசனையை உருவாக்குகிறது. இதில் சூடான டீ ஊற்றி அதை பருகும் போது, டீ-யின் சுவையானது களிமண்ணின் வாசனையால் அதிகரிக்கிறது. டீ-க்கு தனி நறுமணம் மற்றும் சுவையை சேர்க்கிறது. அத்துடன் ஆரோக்கியத்தை அள்ளித்தருகின்றது.
அந்தவகையில் தற்போது களிமண் கப்களில் டீ குடிப்பதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
- மண்ணில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இதில் கொடுக்கப்படும் டீ பருகுவது, களிமண்ணில் இருந்து குறைந்தப்பட்சம் சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது என்பதால், நமது எலும்புகள் வலுவடையும்.
- பொதுவாக மண்ணில் அதிக காரத்தன்மை உள்ளது. இது மனித உடலில் இருக்கும் அமிலத்தை குளிர்விக்கும். இதன் விளைவாக அசிடிட்டி கட்டுப்படுத்தப்படுகிறது.
- வெறும் களிமண்ணாலும் மண்ணாலும் ஆனவை. பயன்படுத்தி முடித்த பின் தூக்கி எறிந்தாலும் அவை பூமியில் மண்ணோடு கலக்கின்றன மற்றும் எந்த வகையான மாசுக்களையும் ஏற்படுத்தாது.
- நீங்கள் குடிக்கும் கண்ணாடி கப் சுத்தமாக இல்லை என்றால், உங்களுக்கு வயிற்றுப்போக்கு, ஜீரண பிரச்சனை ஆகியவை வரும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் மண்கப்களில் இது போன்று நடக்க வாய்ப்பில்லை.
- களிமண்கப்களில் நீங்கள் டீ குடிப்பதால் உங்களது உடலில் உள்ள அமிலத்தன்மை அப்படியே தக்க வைக்கப்படுகிறது.