பசியால் துடித் துடித்த வெள்ளைகார பெண்... அடுத்த நொடியே வியக்க வைத்த தமிழன்!
சமூகவலைதத்தளத்தில் வைரலான பதிவு இது. தமிழனின் பெருமையை கூற இதை விட சிறந்த எடுத்து காட்டு இருக்க முடியாது.
திருவண்ணாமலை செல்லும் வழியில் ஒரு கிராமத்தில் காரை நிறுத்தி, டீக்கடையில், குழந்தைக்கு பால் கேட்டார் ஒரு வெள்ளைக்காரர்.
ஒரு கப் பால் கொடுத்தார் ஆறுமுகம் என்ற ஏழை தமிழன்.
காரில் இருந்த டயானா, பசிக்குது என்று சொன்னாள். உடனே ஆறுமுகம் குடிசைக்குள் சென்று, நாலு இட்லி, மல்லாட்டை சட்னி வைத்து கொண்டு வந்தார்.
"ஹவ் மச், ஓல்டு மேன்?" "சிக்ஸ் ருபீஸ்" என்றார் ஆறுமுகம் "ஃபார் இட்லி ஹவ் மச்?" "இட்லி, ஹோம் இட்லி.
நோ மணி. ஒன்லி மில்க் சிக்ஸ் ருபீஸ்.
யூ ஆர் அவர் கெஸ்ட்" என்றார் ஆறுமுகம். வெள்ளைக்காரர் தமிழனின் சிறந்த விருந்தோம்பல் கண்டு மனம் நெகிழ்ந்து போனார்.
கையெடுத்து கும்பிட்டு விடை பெற்றனர். லண்டனிலிருந்து வெளியாகும் "தி நியூஸ்" என்ற பத்திரிகை இந்த செய்தியை பிரசுரமாக்கி ஆறுமுகத்தின் பெருமையை உலகறியச் செய்தது.