Ethirneechal: வீட்டிற்கு வந்த குணசேகரனை விரட்டியடித்த பெண்கள்... எதிர்பாராத திருப்பம்
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் வீட்டிற்கு வந்துள்ள நிலையில், வீட்டில் உள்ள பெண்கள் அவரை வெளியேற்றியுள்ள சம்பவம் ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
ஆனால் பெண்கள் அனைத்து சவால்களையும் எதிர்த்து போராடி வருகின்றனர். நந்தினி தான் வாங்கிய ஆர்டரை சிறப்பாக செய்து முடித்து அடுத்த ஆர்டரையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் குணசேகரன் சிறையிலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் குடும்ப பெண்கள் அவரை வீட்டிற்குள் நடையேற்றவில்லை.
இதற்கு மறைமுகமாகவும் கதிர் வேலை செய்து வரும் நிலையில், கடைசியாக குணசேகரன் வீட்டில் கால் வைக்காமல் வெளியேறியுள்ளார். அறிவுக்கரசி குணசேகரனை அழைத்துச் சென்றுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |