ஜனனி உயிருடன் விளையாட ஆரம்பித்த குணசேகரன்- திருவிளையாடலாக மாறிய குடும்பம்
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் குடும்பத்தையே திசைத்திருப்பும் வகையில் ஜனனியை போட்டுத்தள்ள பிளான் போட்டு விட்டார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.
குடும்பத்தில் அடிமையாக இருக்கும் பெண்கள், அவர்களை அடக்கி ஆழ நினைக்கும் ஆண் ஆதிக்கம் கொண்ட கணவர்கள் என்ற கருப்பொருளை வைத்தே கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தன்னுடைய அண்ணன் குணசேகரனுக்காக தம்பிகள் தங்களின் மனைவிகளை வெளியில் அனுப்பியுள்ளனர். மரியாதை இல்லாத இடத்தில் இனி வாழ முடியாது என அவர்களும் கோயிலில் சென்று அமர்ந்திருக்கிறார்கள்.
அவர்களை வீட்டுக்குள் கொண்டு வர குணசேகரன் புது திட்டம் போட்டுள்ளார்.
அதாவது தன்னுடைய அம்மாவுக்கு விஷம் கொடுத்து அவரை படுத்த படுக்கையாக்கி, மருமகள்களின் நட்பை பிரிக்க நினைக்கிறார்.
ஜனனிக்கு வரும் ஆபத்து
இந்த நிலையில், மகனின் திருமணத்தை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் ஆட்டத்தை ஆரம்பித்த குணசேகரன் ஜனனியை கொலைச் செய்ய முடிவு செய்துள்ளார்.அதன் முதல்ப்படியாக மேல் மாடியில் உள்ள பூந்தொட்டியை ஜனனி மீது தள்ளிவிட்டு அவரை கொலைச் செய்ய முயன்றார். ஆனால் பூந்தொட்டி தவறி அவரின் காலில் விழுந்து உடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து, ஜனனி அறையை அடைத்து மீண்டும் கொலைச் செய்யப்போவதாக ஜனனி உணர்கிறார். அதனை மற்ற மருமகள்களுடன் கலந்து பேசுகிறார்கள்.
குணசேகரின் கோரப்பிடியில் இருந்து ஜனனி எப்படி உயிரை காப்பாற்றிக் கொள்வார் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது,
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |