பார்கவியை குறி வைக்கும் குணசேகரன்.. ஜெயிலுக்கு போகும் ஞானம்- அடுத்து வெடிக்கும் பூகம்பம்
கதிர்- அறிவுக்கரசி செய்த கொலைக்காக ஞானத்தை ஜெயிலுக்கு அனுப்பிய குணசேகரன் அடுத்ததாக பார்கவிக்கு குறி வைக்கிறார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த குணசேகரன் தர்ஷனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார். அதே சமயம், வீட்டிலுள்ள பெண்களையும் ஹோட்டல் தொழில் செய்வதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.
வெளியில் வந்த குணசேகரன் நாடகம் ஆடி தர்ஷாவை வீட்டிற்கு வரவழைத்து அவரையும், அவருடன் வந்தவர்களையும் ஆட்களை வைத்து அடித்து வீட்டை விட்டு துரத்தியுள்ளார். இதனால் ஜீவானந்த இடம் பேசி பார்கவி தர்ஷன் மற்றும் வாத்தியார் அனைவரையும் வீட்டிற்கு கூட்டிட்டு வந்த பின்னர் கதைக்களம் சூடுபிடித்துள்ளது.
இதெல்லாம் போதாது என கதிர் மற்றும் அறிவுக்கரசி இருவரும் சேர்ந்து பார்க்கவி மற்றும் வாத்தியாரை துன்புறுத்தும் அளவிற்கு அடித்து சித்தரவதை செய்து விட்டார்கள். பிறகு ஜீவானந்தம் அவர்களிடமிருந்து பார்க்கவி மற்றும் வாத்தியாரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பார்கவியின் தந்தை இறந்து விட்டார்.
ஜெயிலுக்கு போகும் ஞானம்
இந்த நிலையில், தந்தையுடன் வாழ்ந்து வந்த பார்கவிக்கு தற்போது யாரும் இல்லை. அப்பாவை இழந்த பார்கவியை அழைத்து கொண்டு அவருக்கு நியாயம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் மருமகள்கள் வீதிக்கு இறங்கி போராட்டம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
அவர்கள் ஒரு பக்கம் போராட்டத்தில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கையில் அறிவுக்கரசி தங்கையையும் தர்ஷனனையும் ஒரே அறைக்குள் அனுப்பி வைக்கிறார்.
விசாலாட்சி செய்த அலப்பறையால் அறிவுக்கரசியால் திருமணத்தை நடத்த முடியவில்லை. கதிர்- குணசேகரன் இன்னொரு பக்கம் கைது செய்து விடுவார்களா? என்ற பயத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். சீரியல் இப்படியாக பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
பார்கவியை குறி வைக்கும் குணசேகரன்
கதிர்- அறிவுக்கரசி செய்த கொலைக்காக ஞானம் பொலிஸ் நிலையத்திற்கு செல்கிறார். கதிரை வைத்து அடுத்த திட்டத்திற்கு தயாரான குணசேகரன், அறிவுக்கரசியை வைத்து புதிய திட்டம் போடுகிறார்.
அப்பாவை இழந்து தனிமையில் வாடும் பார்கவி எறிமலையாய் வெடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்கு மருமகள்கள் துணையாக இருப்பார்கள். தர்ஷன் அன்புக்கரசியை திருமணம் செய்ததது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |