எதற்கும் துணிந்த சக்தி.. பழி தீர்க்க துடிக்கும் ஜனனி- குணசேகரன் திட்டம் கைக்கூடுமா?
குணசேகரன் செய்யும் ஆட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாத சக்தி, இதற்கு ஒரு முடிவுக்கட்ட வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றான எதிர்நீச்சல் தற்போது இரண்டாவது பாகம் சென்று கொண்டிருக்கின்றது.
இதில் தர்ஷன்- பார்கவி இருவருக்கும் மருமகள்கள் திருமணத்தை நடத்தி முடித்துள்ள நிலையில், குணசேகரன் தோல்வியை சந்தித்துள்ளார்.
இதனால் வீட்டிற்கு வராமல் இருந்த குணசேகரன் தற்போது வீட்டிற்கு வந்துள்ளார்.. வந்ததும் தனது ஆட்டத்தையும் ஆரம்பித்துள்ளார்.

கண்கலங்கி நிற்கும் ஜனனி
இந்த நிலையில், ஜனனியிடம் இருக்கும் ஆதாரங்களை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என வீட்டிலுள்ளவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
கடைசியாக அவர் துப்பாக்கியுடன் வீட்டிற்கு வந்து, “ இன்னும் 15 நாட்களில் அனைத்து பிரச்சினையையும் முடிவுக்கு வரும்..” என பொடி வைத்து பேசுகிறார்.

இதனை தொடர்ந்து வீட்டு விட்டு சக்தி வெளியேறும் காட்சி வீட்டிலுள்ளவர்களை கண்கலங்க வைத்துள்ளது. ஜனனிக்கு இந்த முயற்சியில் விருப்பம் இல்லாவிட்டாலும் எப்படியாவது முடித்து விட வேண்டும் என அனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்.மருமகள்களின் திட்டத்தின்படி, கண்ணீருடன் பேசிய ஜனனி, “குணசேகரன் ஜெயிலுக்கு போனால் இனி இந்த ஜென்மத்துக்கு வரக்கூடாது...” என்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |