Ethirneechal: கதிரால் அசிங்கப்படுத்தப்பட்ட சக்தி... ஈஸ்வரியிடம் கொந்தளித்த ப்ரொமோ
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் முன்பு கதிர் சக்தியை அசிங்கப்படுத்திய நிலையில், வீட்டில் உள்ளவர்களிடம் சக்தி கோபப்பட்டுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
ஆனால் பெண்கள் அனைத்து சவால்களையும் எதிர்த்து போராடி வருகின்றனர். சிறையில் இருந்த குணசேகரன் தற்போது வெளியே வந்துள்ளார்.
கதிர் கையில் நடமாடும் பணத்தைக் குறித்தும், தர்ஷனின் காதல் குறித்தும் சக்தி குணசேகரனிடம் கூறியுள்ளார். இதற்கு குணசேகரன் சக்தியை நம்பாமல் கதிருக்கு ஆதரவாக பேசி அவரை அசிங்கப்படுத்தியுள்ளார்.
இதனால் மனம் கஷ்டப்பட்ட சக்தி வீட்டில் ஈஸ்வரி மற்றும் ஜனனியிடம் தனது கோபத்தை வெளிக்காட்டி வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
