Ethirneechal: வீட்டு ஆண்களை விளாசி எடுத்த ரேணுகா... வாயடைத்து நின்ற தருணம்
எதிர்நீச்சல் சீரியலில் வீட்டு ஆண்களிடம் மருமகள் ரேணுகா சரமாரியாக பேசியுள்ள காட்சி வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது.
எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் இந்த சீரியல் ஒளிபரப்பாகிவரும் நிலையில், சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. ஆனால் வீட்டு பெண்களும் தங்களால் முடிந்த அளவிற்கு போராடி வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய பெண்கள் தற்போது தனது மாமியார் விசாலாட்சிக்காக வீட்டிற்குள் மீண்டும் வந்துள்ளனர்.
ஜனனியை தவிர மற்ற மருமகள்கள் வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்துவரும் நிலையில், இதனால் ஜனனியை பழிவாங்க குணசேகரன் இறங்கியுள்ளார்.
அதன்படி அடுத்தடுத்து பல சதி வேலைகளை செய்து பழிவாங்கவும் செய்கின்றார். இந்நிலையில் வீட்டு ஆண்கள் குணசேகரனுடன், ஈஸ்வரியை அமர வைத்து பூஜை செய்வதற்கு முயற்சி செய்கின்றனர்.
ஆனால் வீட்டு பெண்கள் இதற்கு சம்மதிக்காமல் ரேணுகா அனைத்து ஆண்களிடமும் சரமாரியாக பேசியுள்ளார். இதற்கு பதில் அளிக்காமல் சக ஆண்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |