Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை
பாக்கியலட்சுமி சீரியலில் ஹோட்டலை அபகரித்துக் கொண்ட சுதாகர் உள்ளே இருந்த பாக்கியாவின் மாமனார் புகைப்படத்தை தூக்கி வெளியே வீசியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்க்கும் கதையாக சென்றது.
எதுவும் அறியாத பெண்ணாக இருந்த பாக்கியா தற்போது ஹோட்டல் தொழிலில் கொடிகட்டி பறந்து வரும் நிலையில், இவரது ஹோட்டலை இனியாவை வைத்து சுதாகர் அபகரித்துள்ளார்.
பின்பு ஹோட்டலை விட்டு பாக்கியாவையும் வெளியேற்றியுள்ளார். தற்போது இனியாவின் தாத்தா புகைப்படத்தை ஹோட்டலில் இருந்து எடுத்து வெளியே தூக்கி போட்டு உடைத்துள்ளார்.
கதிர் ஹோட்டலில் இருந்தவர்களை அடிக்க சென்ற நிலையில், பாக்கியா தடுத்துள்ளார். நேராக சுதாகரிடம் வந்து அவரை எச்சரித்துள்ளார். பாக்கியா பேச மாட்டாரா என்று இருந்த ரசிகர்கள் தயவு செய்து பாக்கியாவை பேச வேண்டாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |