Ethirneechal: கைவிட்டுச் செல்லும் ஹோட்டல் வண்டி... பறிதவிப்பில் ஜனனி! ஆட்டிவைக்கும் குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலில் தமிழ்சோறு என்ற உணவகத்தை திறப்பதற்காக வைத்திருந்த வண்டி ஜனனியின் கையிலிருந்து வெளியேறுவதற்கு குணசேகரன் பிளான் செய்து நடத்தியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் பெண்களின் அடிமைத்தனத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆணாதிக்கத்தில் கொடிகட்டி பறந்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
தம்பிகளும் குணசேகரன் கூறி வார்த்தைக்கு தலைமை ஆட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜனனி கஷ்டப்பட்டு சக்தியைக் காப்பாற்றி அழைத்து வந்துள்ளார்.

மேலும் விசாலாட்சி தற்போது மருமகள்களுக்கு ஆதரவாக இருந்து வருகின்றார் . வீட்டிற்கு வந்த விசாலாட்சியின் அண்ணன் குணசேகரன் இனி இந்த வீட்டிற்கு வரவே மாட்டார் என்று அருள்வாக்கு கூறியுள்ளார்.
தூரத்தில் தலைமறைவாக இருக்கும் குணசேகரன் மருமகள்களுக்கு அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். அதாவது அவர்கள் ஹோட்டல் நடத்துவதற்கு வைத்திருந்த வண்டியை அதன் உரிமையாளர் திரும்ப கேட்டுள்ளார்.
இன்னும் சில தினங்களில் ஹோட்டல் தொடங்குவதற்கு அனைத்து வேலைகளையும் செய்து முடித்த மருமகள்களுக்கு பேரதிர்ச்சியாக இந்த சம்பவம் உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |