Ethirneechal: குந்தவையால் தான் தனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது... ஜனனியிடம் எகிறும் சக்தி
எதிர்நீச்சல் சீரியலில் சக்தி குந்தவைக்கு ஆதரவாக பேசி ஜனனியிடம் கோபப்படும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியிருந்த பெண்கள் தற்போது வீட்டை விட்டும் வெளியேறியுள்ளனர். மேலும் அவரவர் தொழிலிலும் முன்னேறுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.
சக்தியின் தற்போதைய மாற்றத்திற்கு தெரியாத ஜனனி, மகிழ்ச்சியில் இருந்து கொண்டிருந்தார். ஆனால் சக்தியின் இந்த மாற்றத்திற்கு காரணம் குந்தவை என்று தெரிந்ததும் கோபத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளார்.
இந்த குந்தவையும் அறிவுக்கரசி ஆள் போன்று தான் தெரிகின்றது. மேலும் சக்தி ஜனனியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு அவரை திருமணம் செய்து கொள்ள குந்தவையைத் தான் பேசியுள்ளனர்.
இதுவரை அமைதியாக இருந்த சக்தி தற்போது ஜனனியிடம் கோபமாக பேச ஆரம்பித்துள்ளார். குந்தவை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சக்தியை ஜனனியிடமிருந்து பிரித்துவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |