Ethirneechal: சூழ்ச்சியில் குணசேகரனையே தோற்கடித்த வீட்டு பெண்கள்... கதையில் எதிர்பாராத திருப்பம்
எதிர்நீச்சல் சீரியலில் வீட்டு பெண்கள் சூழ்ச்சி செய்வதில் குணசேகரனையே ஓவர் டேக் செய்துள்ள காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சில மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ள இந்த சீரியலும் தற்போது ரசிகர்கள் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
எப்பொழுது வீட்டில் முடங்கிகிடக்கும் பெண்கள் தற்போதும் அவ்வாறே முடங்கி காணப்படுகின்றனர். ஆனால் குணசேகரனையே மிஞ்சும் அளவிற்கு ஜனனி காய் நகர்த்தியுள்ளார்.
அதாவது தாராவின் சடங்கு விழாவால் பெண்களை பழிவாங்க குணசேகரன் திட்டமிட்டிருந்த நிலையில், வீட்டு பெண்கள் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளனர்.
அதாவது குணசேகரன் சம்மதத்துடனும், அவரது பண உதவியுடனும் புதிய தொழிலை தொடங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
தற்போது ஹோட்டலை திறந்து வைப்பதற்கு வேறு ஒருவர் வருகின்றார் என்று புதிர் போட்டுள்ளனர். அந்த வேறு ஒருவர் அப்பத்தாவாகவே இருக்கும் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |