Ethirneechal: ஹோட்டலாக மாறப்போகும் குணசேகரன் வீடு! அதிர்ச்சி கொடுத்த புதிய நபர் யார்?
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் வீட்டை விலைக்கு பேசுவதற்கு நபர் ஒருவர் வந்துள்ள நிலையில், குடும்பத்தினர் அனைவரும் பேரதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது இரண்டாவது பாகம் சென்று கொண்டிருக்கின்றது. இதில் குணசேகரனின் ஆட்டத்தை அவ்வப்போது மருமகள்கள் அடக்கி வைத்து வருகின்றனர்.
சமீபத்தில் குணசேகரன் மகன் தர்ஷனுக்கு அன்புக்கரசியினை திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் குணசேகரனின் சதி அனைத்தையும் வீட்டு மருமகள்கள் முறியடித்து தர்ஷனுக்கும், பார்கவிக்கும் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

தற்போது குணசேகரனுக்கு குடைச்சல் கொடுப்பதற்கு புதிய நபர் ஒருவர் களமிறங்கியுள்ளனர். மேலும் குணசேகரனின் வீட்டை தங்களுக்கு எழுதி கொடுக்குமாறு கூறுகின்றனர்.
இதனால் குடும்பத்தினர் அனைவரும் பேரதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில், வந்திருக்கும் நபர் யார் என்பது மிகவும் சீக்ரெட்டாகவே உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |