Ethirneechal: லீக்கான ஆதாரம்.. படபடப்பில் அறிவுக்கரசி- குணசேகரன் எடுக்கப்போகும் முடிவு என்ன?
ஈஸ்வரி விவாகரத்தில் முக்கிய ஆதாரம் சமூக வலைத்தளங்களில் கசிந்த நிலையில், குணசேகரன் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
அவர் இந்த நிலைக்கு செல்வதற்கு அவருடைய கணவர் குணசேகரன் தான் காரணம் என வீட்டிலுள்ள பெண்கள் கூறுகிறார்கள்.
இதற்கான ஆதாரம் வீட்டில் வந்து அதிகாரமாக உரிமை கொண்டாடும் அறிவுக்கரசியிடம் இருக்கிறது. ஆனால் ஈஸ்வரி கொலை முயற்சி வழக்கில் ஜனனியை சிக்க வைப்பதற்காக வீட்டில் சதி நடந்து கொண்டிருக்கிறது.
பணப்பலத்தை காட்டும் குணசேகரன் மற்றும் அறிவுக்கரசி இருவரும் புதிதாக அதிகாரியொருவரை கொண்டு வருகிறார்கள். அவர், உண்மையை கண்டுபிடிக்காமல் ஜனனியை எப்படி சிக்க வைக்கலாம் என ஆதாரம் சேகரிக்கிறார்.
கசிந்த காணொளி
இந்த நிலையில் அறிவுக்கரசியை பிடித்து அவரை அடித்து அவரிடம் உள்ள தொலைபேசியை பறித்து எடுக்கும் முயற்சியில் கடந்த எபிசோட்களில் மருமகள்கள் இறங்கியிருந்தார்கள். அவர்கள் தொலைபேசியை பறித்து எடுக்க முற்ப்படும் பொழுது கதிர் நடுவில் வருகிறார்.
அந்த சமயத்தை பயன்படுத்திய அறிவுக்கரசி தொலைபேசியை கீழே போட்டு உடைத்து, ஆதாரத்தை யாரும் பார்க்க முடியாத நிலையை உருவாக்கிறார்.
இதற்கிடையில், தொலைபேசியில் உள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் கசிந்தது போன்று ஒரு காட்சி காட்டப்பகிறது. ஆதாரம் எப்போது வெளியில் வரும் என எதிர்பார்த்த சின்னத்திரை ரசிகர்கள் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பில் இருக்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |