Ethirneechal: கல்யாண பெண்ணாக மாறிய பார்கவி - அடிபொலி திட்டம் போடும் ஜீவானந்தம்
தர்ஷன் திருமணத்திற்கு எல்லோரும் தயாராகி இருக்கும் நிலையில் ஜீவானந்தம் பார்கவியை ஜீவானந்தம் தயார் படுத்துகிறார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
அவர் இந்த நிலைக்கு செல்வதற்கு அவருடைய கணவர் குணசேகரன் தான் காரணம் என சிறு சிறு ஆதாரத்துடன் வீட்டில் உள்ள மற்றைய மருமககள்கள் கூறுகிறார்கள்.
இதை கண்டுபிடிக்க ஜனனி பலவாறு முயற்ச்சி செய்து வருகிறார். இந்த நிலையில் அறிவுக்கரசி தன் தங்கையை தர்ஷனுக்கு திருமணம் செய்து வைக்க தடபுடலாக தயாராகி கொண்டு வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க ஜனனி பார்கவியை திருமணத்திற்கு தயாராக்கி வருகிறார். இதற்கு ஜீவானந்தம் உதவி செய்து வருகிறார்.
திருமணத்திற்கு பக்காவாக தயாராகும் பார்கவி
தற்போது தர்ஷன்- அன்புக்கரசி திருமணத்தை எப்படியாவது நடத்தி முடித்து விட வேண்டும் என அறிவுக்கரசி மற்றும் குணசேகரன் பலத்த திட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தர்ஷன் காதலை புரிந்து கொண்ட பார்கவி தர்ஷனை திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறார். ஜீவாநந்தம் மற்றும் பார்கவியை தற்போது போலீஸ் துரத்திக்கொண்டு இருக்கின்றனர்.
இந்த சிக்கலுக்கும் இடையில் பார்கவியை திருமணத்திற்கு ஜீவானந்தம் தயாராக்கி வருகிறார். இதில் ஜனனி மற்றும் ஜீவானந்தம் தர்ஷன் மற்றும் பார்கவியை சேர்த்து வைப்பார்களா என்பதை பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |