Ethirneechal: தர்ஷனை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற அறிவுக்கரசி! பெண்களின் அடுத்த முடிவு என்ன?
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷன் தற்போது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், அறிவுக்கரசி அவரது வீட்டிற்கு தர்ஷனை அழைத்துச் சென்றுள்ளார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சில மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ள இந்த சீரியலும் தற்போது ரசிகர்கள் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
வீட்டில் முடங்கி இருந்த பெண்கள் தற்போது குணசேகரன் சம்மதத்துடன் ஹோட்டல் தொழிலில் உச்சத்திற்கு செல்கின்றனர்.
தர்ஷன் தற்போது அன்புக்கரசியை தனக்கு பிடிக்கவில்லை என்றும் மேற்கொண்டு படிக்க இருப்பதாக கூறி குணசேகரனிடம் அடி வாங்கியுள்ளார்.
இந்நிலையில் அறிவுக்கரசி தனது வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளார். அதாவது தர்ஷனின் போனை வாங்கிக் கொண்டு அவருக்கு புது நம்பருடன், புதிய போனை கொடுத்துள்ளார்.
மேலும் தர்ஷனின் சம்மதம் இல்லாமல் வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். குடும்பத்தில் உள்ள பெண்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |