தலைமுடியை கட்டுங்கடங்காமல் வளர வைக்கும் பொருள்.. ஷாம்பூவுடன் கலந்து போடுங்க
தலைமுடி பிரச்சினை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
தலைமுடி எப்போதும் ஒல்லியாகவே உள்ளது என பலரும் கவலையுடன் இருப்பீர்கள், ஆனால் ஒரு தீர்வு உள்ளது.
தலைமுடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல் வீட்டுள்ள பொருட்களை இயற்கையாக ஹேர் மாஸ்க் செய்து போடலாம்.
இப்படி இயற்கை வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், எவ்வித பக்க விளைவும் ஏற்படாது. அதே சமயம் உங்களின் தலைமுடியும் வலுவாக இருக்கும்.
முக்கியமாக தலைமுடி உதிர்வது முற்றிலும் நின்று, முடியின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். அந்த வகையில், தலைமுடியை அடர்த்தியாக வளரத் தூண்டும் ஒருசில இயற்கை ஹேர் மாஸ்க் எப்படி செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடுகு- 2 மேசைக்கரண்டி
- கறிவேப்பிலை- 1 கைபிடி அளவு
- சின்ன வெங்காயம் - 3
- கஞ்சி தண்ணீர்- 1 கப் அளவு
- ஷாம்பூ - பயன்படுத்தும் அளவு
- காபி பொடி- 1 மேசைக்கரண்டி
தயாரிப்பு முறை
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கடுகை போட்டு, நன்றாக வறுத்தெடுக்கவும். அதன்பின்னர் வேறு பாத்திரத்திற்கு கடுகை மாற்றி, நன்றாக ஆற விடவும். அதே கடாயில் கறிவேப்பிலையை போட்டு, அடுப்பை பற்ற வைக்காமல் வாட்டவும்.
இந்த இரண்டு பொருட்களையும் ஒரு மிக்ஸியில் போட்டு, பவுடர் செய்து கொள்ளவும். அந்த பவுடரை சுத்தமான போத்தலில் அடைத்து வைத்து கொள்ளலாம்.
குளிக்கும் முன்னர் பயன்படுத்தலாம். குளிப்பதற்கு முன்னர், சின்ன வெங்காயத்தை உரலில் போட்டு நன்றாக தட்டி விட்டு, 1 கப் அளவு கஞ்சி தண்ணீர் எடுத்து, அதனை இரண்டாக பிரித்து கொள்ளவும். அதில் ஒன்றில் கறிவேப்பிலை பொடி சேர்த்து கரைத்து கொள்ளவும்.
அதன் பின்னர், இந்த தண்ணீருடன் சின்ன வெங்காயத்தையும் அதனுடன் கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, வடிகட்டி தலைக்கு போடலாம்.
தலைக்கு போட்டு மசாஜ் செய்து வந்தால் தலைமுடி உதிர்வு, இளம் நரை உள்ளிட்ட பிரச்சினைகள் கூட சரியாகும்.
குளிக்கும் பொழுது கஞ்சி தண்ணீரில் காபி பொடி கலந்து விட்டு அலசலாம். அதனுடன் ஷாம்பூ கலந்து விட்டு பயன்படுத்தினால் தலைமுடி பளபளப்பாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |