Ethirneechal: நந்தினி வாழ்க்கைக்குள் அறிவுக்கரசி... வாயடைத்து நிற்கும் கதிர்
எதிர்நீச்சல் சீரியலில் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அறிவுக்கரசி சமைப்பதற்கு புதிய பெண்ணை அழைத்து வந்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியுள்ள பெண்கள் தற்போது தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பல செயல்களை செய்து வருகின்றனர். மேலும் குணசேகரன் வருகையால் பெண்கள் வெளியேறி தற்போது லாட்ஜில் தங்கி வருகின்றனர்.
தற்போது வீட்டில் சமையல் செய்வதற்கு பெண்கள் இல்லாததால், அறிவுக்கரசி சமையல் செய்வதற்கு ஆட்களை அழைத்து வந்துள்ளார்.
அறிவுக்கரசி கதிர் மீது சற்று அதிக அக்கறை எடுத்து வருகின்றார். இது கரிகாலனுக்கு தெரிந்து கூட்டத்தில் உண்மையை அவிழ்த்து விடுகின்றார். நந்தினியின் பெண்ணும் அவருக்கு போன் செய்து அறிவுக்கரசி அழைத்து வந்த ஆட்களை கூறியுள்ளார்.
அறிவுக்கரசியினால் நந்தினியின் வாழ்க்கையில் பூகம்பம் ஏற்படுமா என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |